பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 புத்த சமயப் பிரச்சாரம் செய்யச் செய் தார். நாடெங்கும் தர்ம சாலைகளை அமைத்தார். உயிர்க் கொலைகளை நிறுத்தினார். நாடெங்கும் புத்தரின் பொன்மொழி களைக் கல்வெட்டுகளாகச் செதுக்கச் செய்தார். அவர் பொன் மொழிகளை தூபிகளில் செதுக்கினார். அத்தகைய மொழிகளை அசோகத் தூபி ஒன்றி லிருந்து எடுக்கப்பட்ட மூன்று அங் கங்களின் உருவமும் சக்கரமும் இன்று நம் தேசியக் கொடியின் நடு வில் இடம் பெற்றுள்ளது. இவர் அனுப்பிய புத்த பிக்குகளின் மூலம் தாய்லாந்து, சீனா முதலிய நாடுகளில் புத்த மதம் பரவியது. அஞ்சல் நிலையம்: வெளியூரில் இருக்கும் யாருக்காவது கடிதம் அனுப்ப வேண்டும் என்றால் 'அஞ் சல் மூலம் அனுப்புகிறோம். கடிதம் எழுதுபவர்கள் தங்களுக்கு அருகா மையில் உள்ள அஞ்சல் பெட்டியில் போடுவார்கள். குறிப்பிட்ட நேரத் தில் அஞ்சலக ஊழியர் அவற்றை யெல்லாம் எடுத்துச் சென்று, அவற் றின் மீதுள்ள அஞ்சல் தலையில் முத்திரையை குத்துவார். பின்பு, அவற்றை ரயில், மோட்டார் வண்டி, விமானம் ஆகியவற்றின் மூலம் அனுப்புவதற்காகத் தனித்தனியே பிரிப்பார்கள். இவ்வாறு குவியும் கடி தங்களைப் பிரிப்பதற்கென்றே பெரிய ஊர்களில் கடிதம் பிரிக்கும் அலுவல கங்கள் தனியே உண்டு. பிரித்த கடிதங்களைப் பைகளில் போட்டுக் கட்டி, முத்திரையிட்டு, அந்தந்த வாகனங்களுக்கு அனுப்புவார்கள். கடிதங்கள் மட்டுமல்லாமல் பொருள் பார்சல்களும் இவ்வாறே அனுப்பப் படும். - சாதாரண அஞ்சல் கடிதங்களைப் பெட்டியில் போட்டால் போதும். சில அட்டை முக்கியமான கடிதங்கள் பத்திரமாக உரியவரிடம் போய்ச்சேர அவற்றை பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். இதற்குத் தனிக் கட்டணம் செலுத்த வேண்டும். சில விலை உயர்ந்த பொருட்களை அனுப்பும்போது அவற் றைக் காப்புத்தொகை செலுத்தி (இன்ஷார்) அனுப்ப வேண்டும். இதற்கெனத் தனிக் கட்டணம் உண்டு, வங்கிகளில் பணம் போடு வதுபோல் அஞ்சலக சிறு சேமிப்பு வங்கியிலும் பணம் போடலாம். o உள்நாட்டில் எங்கும் அஞ்சல் அனுப்ப ஒரே கட்டணம் வசூலிப்பார் கள். ஆனால், வெளிநாட்டுக்கு அனுப்பும் அஞ்சலுக்குத் தூரத்துக் குத் தகுந்தபடி கட்டணம் உண்டு. வெளிநாட்டுக்கு விமானம் மூலமும் தரை, கப்பல் வழியாகவும் அனுப்ப லாம். இவற்றிற்குத் தனித்தனி கட்ட ணம் உண்டு. தூரத்தைப் பொருத் தும் எடையைப் பொருத்தும் கட்ட ணம் வசூலிக்கப்படும். பெரிய நகரங்களில் நடமாடும் அஞ் சல் வண்டிகள் உண்டு. இவை குறிப் பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத் திற்கு வந்து செல்லும். நாம் எழுதும் கடிதங்கள் உரியவர் களுக்குத் தாமதமின்றிப் போய்ச் சேரவேண்டுமானால் முகவரி தெளி வாக எழுதப்பட வேண்டும். போது மான அஞ்சல் தலை ஒட்டப்பட வேண்டும். போய்ச்சேரும் பகுதிக் கான பின்கோடு' எண் சரியாகக் குறிப்பிடப்பட வேண்டும். அட்டை (தாள்): காகிதத்தைவிட மிகக் கனமானது. காகிதம் செய்யப் பயன்படும் மூலப் பொருள்களிலிருந்து அட்டைகள் செய்யப்படுகின்றன. காகிதம் செய்யப் பயன்படும் இயந்தி ரம் போன்றவைகளே அட்டை தயா ரிக்கும் எந்திரங்கள்.