பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடை காக்கும் கருவி அறுவை சிகிச்சை மூலம் இச்சதைகள் அகற்றப் படுகின்றன. சின்னஞ்சிறு வயதில் அடித்தொண் டையில் அதிகப்படியாக ஒரு நிணநீர் இழைமம் ஏற்படும். இதை அடி னாய்டு என அழைப்பார்கள். இதை மூன்றாவதான அடிநாச்சதை என்று அடிநாச் சதை கூறலாம். இது உள்நாக்கைப் போல் பல அடுக்குத் திசுக்களைக் கொண்ட தாகும். சிற்சில சமயங்களில் இதுவும் அழற்சியடைந்து தொண்டைநோயை உண்டாக்கும். இதன் காரணமாக 'அடினாய்டு உருவில் பெருத்து விடும். அப்போது வாய்வழியாக மூச்சு விடுவது, சளி கொட்டுவது, வரட்டு இறுமல், மூக்கால் பேசுவதுபோல் இருத்தல் போன்றவை இந்நோயின் அறிகுறிகள் ஆகும். உடனடியாக இந்நோயைக் குணமாக்காவிட்டால் காது கேட்கும் திறன் குறைந்துவிடக் கூடும். அழற்சியடைந்த உள்நாக் கின் அடிநாச் சதையை நீக்கும்போது அழற்சி அடைந்த அடினாய்டு’ வையும் நீக்கிவிடுவது வழக்கம். இப் படி நீக்குவதால் உடலுக்கு எவ் விதப் பாதிப்பும் ஏற்படாது. அடிப்படை உரிமைகள்: மனித ரா கப் பிறந்த ஒவ்வொருவருக்கும் யாரா له به லும் மறுக்க முடியாத சில உரிமைகள் உண்டு. இவை அடிப்படை உரிமை கள் என அழைக்கப்படுகிறது. இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றி இந்திய அரசமைப்புச் சட்டம் .ெ த ரி வாக க் குறிப்பிட்டுள்ளது. அவையாவன: 1. சாதி, சமய வேறு பாடு இல்லாது, சம உரிமை, வேலை வாய்ப்பு. 2. மக்கள் தங்கள் கருத்து களைச் சுதந்திரமாக மற்றவர்கள் மத் தியில் பேச, எழுத, வெளியிட உரிமை, 3. சமூக நலனுக்குத் தீங்கு இல்லாத முறையில் நாட்டின் எப் பகுதியிலும் அறவழியில் தங்களுக்கு விருப்பமான தொழிலைச் செய்தல். 4. இந்தியாவின் எப்பகுதியிலும் சொத்துகளை வாங்க, விற்க உரிமை, 5. சிறுவர்களிடமும் வயது முதிர்ந்த வர்களிடமும் வற்புறுத்தி வேலை வாங்குவதை எதிர்த்துப் போராடும் உரிமை, 6. அனைத்துச் சமயத்தின ரும் தத்தமது சமய வழிமுறைகளைப் பின்பற்ற, போதிக்க, கல்விக் கூடங் களை நிறுவிக் கொள்ள உரிமை, 7. இந்த அடிப்படை உரிமைகளில் எவற்றையேனும் அரசோ மற்றவர் களோ பறிக்க முற்பட்டால் அதை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து நியாயம் பெறும் உரிமை. மக்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாக வும் வாழ இந்த உரிமைகள் உத்தர வாதமளிக்கின்றன. இவ்வுரிமைகளை ஒவ்வொரு குடிமகனும் மதித்துப் பின் பற்றி வாழக் கடமைப்பட்டுள்ளான். அடைகாக்கும் கருவி. கோழி தான் இட்ட முட்டைகளின் மீது அடைகாத்து குஞ்சு , பொறிக்கும். ஆனால் கோழி இல்லாமலே இம் முட்டைகளைக் குஞ்சு பொறிக்க வைக்கும் கருவி கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. அதுவே அடைகாக்கும் கருவி (இன்குபேட்டர்) ஆகும். ஒரு கோழியால் பன்னிரண்டு முட்டைகள் மட்டுமே அடைகாக்க முடியும். '