பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலெர்ஜி வீரத்தை தந்தையிடமிருந்தும் அறி வாற்றலைத் தன் ஆசிரியர் அரிஸ் டாட்டிலிடமிருந்தும் பெற்றார். தமது இருபதாவது வயதில் அரி யணை ஏறிய அலெக்சாந்தர் பெரும் படைகொண்டு பாரசீக நாட்டைத் தாக்கி வெற்றி பெற்றார். அதன்பின் பல நாடுகளை வென்று இறுதியாக இந்தியாவின் மேற்குப் பகுதியை வெற்றி கண்டார். f தாயகத்தைவிட்டு வந்து நீண்ட நாட்களாகிவிட்டதால் தொடர்ந்து போரிட வீரர்கள் மறுத்துவிட்டனர். இதனால் அலெக்சாந்தர் மீண்டும் தாயகம் திரும்ப வேண்டியதாயிற்று. அவர் பாபிலோனில் இருந்தபோது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந் தார். அலெக்சாந்தர் நாடுகளை வெற்றி கொள்வதற்கு மட்டும் பன்டயெடுக்க வில்லை. கிரேக்க நாகரிகத்தையும் பண்பாட்டையும் உலகெங்கும் பரப் பவும் படையெடுத்தார். தன் படை யெடுப்பின் மூலம் கிரேக்கம் முதல் இந்தியாவரை பற்பல நாடுகளோடு கிரேக்கத் தொடர்பை உருவாக்கி னார். தான் வெற்றி பெற்ற நாடுகளி லெல்லாம் புதிய நகரங்களை உரு வாக்கினார். அதில் புகழ் பெற்ற நக ராக இன்று விளங்கிவருவது எகிப்தில் உள்ள அலெக்சாந்திரியா நகர மாகும். 88 வயதுக்குள் உலகின் பெரும் பகுதியை வென்ற பெருமை இவரையே சாரும். அலெர்ஜி: "அலெர்ஜி என்பது ஒவ்வாமை ஆகும். நாம் உண்ணும் உணவுப் பொருள்களில் ஒன்றி ரண்டை நம் உடல் ஏற்றுக் கொள்வ தில்லை. அவைகளை நாம் உண் டால் உடனே தலைவலி, உடல் எரிச்சல் போன்ற உடல் தொல்லை 89 கள் ஏற்படும். எனவே, இது ஒவ் வாமை நோய்' என அழைக்கப்படு கிறது. சிலருக்கு சிலவகை காய்கறிகள் பிடிக்காது. வேறு சிலருக்கு சிலவகை தானியங்கள் ஒவ்வுவது இல்லை. மற்றும் சிலருக்கு சிலவகைப் பூக்க ளின் மணம் ஒவ்வுவது இல்லை. நாம் அன்றாட வாழ்வில் பயன் படுத்தும் கம்பளி, சிலவகை முகப் பூச்சுத்துாள்கள் (பவுடர்), கூட்டும் போது எழும்பும் தூசிகள் இவை உட னடியாக ஒவ்வாமை நோயை உண் டாக்கும். சிலருக்கு உடம்பில் தடிப்பு கள் ஏற்படும். வேறு சிலருக்கு உடல் அரிப்பு உண்டாகும். இன்னும் சில ருக்கு ஆஸ்துமா போன்ற ஈழை நோய்கள் உண்டாகும். தகுந்த மருத் துவப் பரிசோதனைகள் மூலம் ஒவ் வாமைப் பொருள் எது எனக் கண் டறியலாம். அவற்றை உண்ணாமல் அல்லது பயன்படுத்தாமல் இருப் பதன் மூலம் இந்நோய் ஏற்படாமல் தடுக்கலாம். அலைகள் கடற்கரையில் கடல் அலைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து மோதி மறைவதைக் காண லாம். இந்த அலைகள் பேரலை களாக இருக்கும். ஏரி, குளம், குட்டை களிலும் அலைகள் உண்டு. ஆனால், இவை சக்தி குறைந்த சிற்றலை களாக இருக்கும். நீரின் அளவுக்கும் பரப்புக்குமேற்ப அலைகளின் வேகம் அமையும். பலத்த காற்றின் போதோ, புயலின் போதோ அலைகள் மிக உயரமாக எழும்பி விழும். அலைகள் எழுவதற்கு காற்றைவிட வேறு காரணங்களும் உள்ளன. சந்திரனும் சூரியனும் பூமியைத் தன் பால் ஈர்க்கின்றன. இந்த ஈர்ப்பு விசையே அலைகள் உருவாகக்