பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 அழைக்கப்படுகிறது. சிலசமயம் இவற் தின் அளவு ஐந்து, ஆறு செ.மீ. இருக்கும். ஆகாயத்தில் உள்ள கார் மேகத் தில் ஈரமான காற்றோட்டம் சென்ற டையும். அப்போது நீராவியின் வெப்பம் குறைந்து நீர்த்துளிகளாகும். அதன் வெப்பநிலை பனிக்கட்டியின் உருகு நிலையைவிட குறைவாகும், அப்போது உருவாகும் பனிக்கட்டிப் படிகங்கள் மேகத்தினின்றும் கீழே இறங்கும். அப்போது இதன்மேல் படி யும் நீர்த்துளிகள் உறைந்து இவற் றுடன் ஒட்டிக்கொள்கின்றன. இவ் வாறு கீழே இறங்கும் பனிக்கட்டிகள் காற்றோட்டத்திற்கேற்ப மேலும்கீழும் பலமுறை சென்று இறுதியில்தரையை அடைகின்றன. இதனால் இவற்றின் வடிவம் காற்றோட்டத்திற்கேற்ப பல் வேறு வடிவங்களில் இருக்கும். சிறு சிறு வெண்பனித் தூ ள் க ைள ப் போன்ற ஆலங்கட்டி வகையும் உண்டு. ஆலமரம்: இந்திய மர வகைகளில் மிகப் பெரியது ஆலமரமாகும். நூறு அடி உயரம் வரை வளரும். 50 அடிக்கு மேல் அதன் அடிமரச் சுற்ற ளவு இருக்கும். ஆலமரத்தின் கிளைகளிலிருந்து விழுதுகள் கீழே இறங்கி வேர்களாக நிலத்தில் பதியும். அவை வளர்ந்து மரங்களைப் போல் பருக்கும். இவ் விழுதுகளைக் கொண்ட ஆலமரம் ஒரே தோப்பு போல் காட்சியளிக்கும். ஆலமரத்தின் பழங்கள் சிறியவை யாகவும் சிவப்பாகவும். இருக்கும். இவற்றைப் பறவைகள் உண்ணும். இலைகள் பச்சையாகவும் அகலமாக வும் இருக்கும். இளம் விழுதுகளை சிறு குச்சிகளாக வெட்டிபல் துலக்கப் ஆழ்கடல் விலங்குகள் பயன் படுத்துவார்கள். ஆ லும் வேலும் பல்லுக்கு உறுதி என்பது பழமொழியாகும்.ஆலமரத்துப்பட்டை மருந்துப் பொருளாகவும் பயன்படு கிறது. இந்தியாவில் புகழ்பெற்ற ஆலமரங் களில் கல்கத்தாவில் உள்ள மரமும் சென்னை அடையாறு ஆற்றங்கரை யிலுள்ள மரமும் அடங்கும். கல்கத்தா வில் உள்ள மரம் ஐம்பதுக்கு மேற் பட்ட விழுதுகளை உடையது. அடை யாறு ஆலமரம் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்வு உடையத்ாகும். இம் மரம் 1988ஆம் ஆண்டு ஜூனில் புய லில் விழுந்துவிட்டது. அதனை மீண் டும் நட்டு உயிர் உண்டாக்கினர். ஆவியாதல் நீர் அருவியாக ஆவ தே ஆவியாதல் ஆகும். ஈரத்துணி கள் வெயிலில் உலரும்போது அத் துணியில் உள்ள நீர் விரைந்து ஆவி யாகும். அதனால் அத்துணி ஈரப் பசை இல்லாது உலர்ந்து விடுகிறது. இதேபோன்று நீர் நிலைகளில் உள்ள நீர் வெப்பத்தின் காரணமாக ஆவி யாகிக் கொண்டே இருக்கிறது. வெப் பம் குறைகிறபோது ஆவியாதலும் குறைந்துவிடுகிறது.அடுப்பில் உள்ள பாத்திரத்தில் நீர் கொதிக்கும்போது நீர் ஆவியாகி மெல்லிய புகை போன்று வெளியேறுவதைக் காண லாம். இவ்வாறு நீராவியாகும் ஆவி ஆகாயத்தை நோக்கிச் சென்று மேக மாக உருமாறி மிதக்கிறது. அவற்றின் மீது குளிர் காற்றுப்பட்டவுடன் மீண் டும் நீர்த் திவலைகளாகி மழையாகப் பெய்கிறது. ஆழ்கடல் விலங்குகள்: கடலில் வாழும் உயிரினங்கள் மூன்று மட்டங் களில் வாழ்கின்றன. ஒன்று கடலின் மேற்பரப்பில் வாழ்கின்றன. மற்