பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மக்களில் 70 சதவிகிதம் பேர் உழவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளதால்இந்தியா ஒரு விவசாய நாடாகவே கருதப்படு கிறது. நீர்வளம் மிகுந்த பகுதிகளில் நன் செய்ப் பயிர்களான கோதுமையும், நெல்லும் பெருமளவில் விளைகின் கின்றன. இவை இரண்டுமே இந்திய மக்களின் முக்கிய உணவுப் பொருட் களாகும். நீர்வளம் குறைந்த பகுதி களில் சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற புன்செய் பயிர்கள் விளை கின்றன. தென்னாட்டில் கடலை மிகுதியாகப் பயிராகிறது. ஆந்திரத் தில் புகையிலையும், வங்காளம், அசாம் பகுதிகளில் சணலும் அதிகம் விளைகிறது. தமிழ்நாடு, மகாராஷ் டிரம், ஆந்திரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பருத்தி விளைகிறது. இதனால் இம்மாநிலங்களில் பஞ் சாலைகள் பல உள்ளன. வடநாட் டில் பீகார், மத்தியப்பிரதேசம், ஒரிசா, மேற்கு வங்காளம் மாநிலங்களில் இரும்புத் தொழிற்சாலைகள் உள் ளன. தமிழ்நாட்டில் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி கிடைப்பதால் அங்கு ஒரு பெரிய தொழிற்சாலை உள்ளது. இந்தியா தொழில் துறையில் முன் னேறி வரும் நாடாகும். விசாகப்பட்டி னத்தில் கப்பல் கட்டும் தொழில் நடைபெற்று வருகிறது. மேற்கு வங் காளத்தில் சித்தரஞ்சன் ரெயில் எஞ் சின் தயாரிக்கும் தொழிற்சாலை உள் ளது. சென்னை பெரம்பூரில் ரெயில் பெட்டித் தொழிற்சாலை அமைந்துள் ளது. பெங்களுரில் விமானம் உரு வாக்குதல், கடிகாரம் செய்தல் தொலைபேசிக் கருவிகள் தயாரித்தல் போன்ற தொழில்கள் நடைபெறுகின் றன. சென்னை, கல்கத்தா போன்ற விடங்களில் மோட்டார் தொழிற் இந்தியா சாலைகளும் சைக்கிள், மோட்டார் சைக்கிள் தொழிற்சாலைகள் பலவும் உள்ளன. இந்தியாவில் இரும்பு, நிலக்கரி அலுமினியம், தங்கம், ஆபிரகம், மாங் கணிசம், பெட்ரோலியம், சுண்ணாம் புக்கல் முதலிய கனிமங்கள் கிடைக் கின்றன. எனவே இவை தொடர் பான தொழிற்சாலைகள் ஆங்காங்கே அமைந்துள்ளன. இந்தியாவில் அடர்ந்த காடுகள் பல இருப்பதால் அங்கு யானை, புலி, சிங் கம். காண்ாடமிருகம், கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் வாழ்கின் றன. மான், காட்டுப்பன்றி, குரங்கு வகைகள் இந்தியாவில் அளவில்லா மல் வாழ்கின்றன. இந்தியாவில் பல வண்ணப் பறவை கள் வாழ்கின்றன. மயில் இந்தியா வின் தேசியப் பறவை ஆகும். வன விலங்குகள், பறவை இனங்களை அழியாமல் காக்க ஆங்காங்கே சர ணாலயங்கள் உருவாக்கப்பட்டுள் 6ss6.JI, இந் தி யா வி ன் போக்குவரத்து சா ைல க ள், இருப்புப் பாதைகள், விமான மார்க்கங்கள், ஆறு, கடல்கள், வழியாக நடைபெற்று வருகின்றன. காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை நெடுஞ்சாலைகளும் இருப்புப் பாதை களும் அமைக்கப்பட்டுள்ளன. ஆசி யாவிலேயே மிக நீண்ட இருப்புப் பாதையுடைய முதலாவது நாடு இந் தியா. இதன் முக்கிய ந க ர ங் க ள் அனைத்தும் விமானப் போக்குவரத் தால் இணைக்கப்பட்டுள்ளன. கல் கத்தா, சென்னை, கொச்சி, பம்பாய் துறைமுகங்கள் கப்பல் போக்குவரத் தால் இணைக்கப்பட்டுள்ளன.