பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பிள்ளை வாதம் பகுதியில் அமைந்துள்ளதால் மழை யும் வெப்பமும் அதிகமாகும். இத் தீவு நாடு மலைகளால் மிகுதி யும் சூழப்பட்டிருப்பதால் சமவெளி வேளாண் நிலங்கள் குறைவு.இந்நாட் டில் ஆறுகள் பல ஒடுகின்றன. அவற் றுள் வளவை கங்கை, மாவலி கங்கை, ஒயா ஆறுகள் முக்கியமானவைகளா கும். இங்கு பெரிய ஏரிகள் பலவுண்டு. அவற்றுள் சேன நாயக ஏரி 100 ச.கி. மீ. ஆகும். இங்குள்ள மலை, காட்டுப் பகுதிகளில் தேயிலை, ரப்பர், இலவங் கம், ஏலம், கோக்கோ, தென்னை மிகுதியாக விளைகின்றன. இவற்றுள் பெரும்பாலானவை வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இலங்கையில் உயர்வகை கிரா ஃபைட்டு கனிமம் கி ைடக் கி றது. மாணிக்கம், வைடூரியம், நீலம், முதலி யனவும் கிடைக்கின்றன. இலங்கையின் வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் தமிழர் மிகுதியாக வாழ் கின்றனர். மற்ற பகுதிகளில் சிங்கள வர் வாழ்கின்றனர். மலைத் தோட் டங்களில் ஏராளமான தமிழர்கள் பணி செய்கின்றனர். இலங்கைத் தலைநகரம் கொழும்பு ஆகும். இது துறைமுக நகரமாகும். இலங்கை மக்களில் சிங்களவர்கள் பெளத்த மதத்தைச் சார்ந்தவர்கள். தமிழர்கள் இந்து சமயத்தைச் சார்ந் தவர்களாக உள்ளனர். தமிழர்களில் முஸ்லிம்களும் கணிசமான எண்ணிக் கையில் உள்ளனர். திருகோணமலை மற்றொரு துறைமுக நகரமாகும். யாழ்ப்பாணம், கண்டி, இவை மற்ற நகரங்களாகும். சிங்களர் சிங்கள மொழியும், தமிழர் தமிழ் மொழியும் பேசுகின்றனர். இளம்பிள்ளை வாதம்: இது இளம் சிறார்களைத் தாக்கும் கொடிய நோய். 91 இது ஒருவகைத்தொற்று நோயாகும். நோயாளியின் மலம், சளி இவற்றின் மூலம் இந்நோய் பரவி குழந்தை களைப் பாதிக்கிறது. இந்நோய் குழந்தைகளின் நரம்பு மண்டலம், முதுகுத் தண்டு, தசைப் பகுதிகள் ஆகியவற்றைத் தாக்கி முடமாக்கிவிடும். இந்நோய் இளம் சிறுவர்களைத்தாக்குகிறது. வயதான வர்களைப் பாதிப்பதில்லை. இந்நோய்க் கிருமிகள் மிக நுண்ணி யதாகும். நுண் பெருக்காடியின் மூலம் பார்த்தாலும் மிக நுண்மையான தாகத் தோன்றும். இது ஒருவகை நச்சு நுண்மம் (வைரஸ்) ஆகும். இந் நோய் கண்டுள்ளதைச் சில அடை யாளங்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும். இந்நோய் பீடித்தவுடன் காய்ச்சல் வரும். தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு உண்டாகும். கழுத் துத் தசையை இயக்க இயலாது. முதுகுத் தண்டில் கடுமையான வலி ஏற்படும். கைகள் நடுக்கமடையும். வலியால் குழந்தைதொடர்ந்து அழும். இந்த அறிகுறிகளைக் கண்டவுடன் மருத்துவரை அணுகி உடனடியாகப் பரிசோதித்து, மருத்துவம் செய்ய வேண்டும். இத்தகைய நோயைப் போக்க புதிய மருந்துகளும் மருத்துவ வழிமுறை களும் கண்டறியப்பட்டுள்ளன.பாதிக் கப்பட்ட நரம்புகளையும் தசைகளை யும் கூட சிலவகைப் பயிற்சிகள் மூலம் சரிப்படுத்திவிடலாம். இதற் கெனக் கண்டறியப்பட்டுள்ள மின் சாரக் கருவிகள் மூலம் சிறந்த சிகிச்சை அளிக்க முடியும், இளம்பிள்ளை வாத நோய் வராமல் தடுக்க குழந்தை பிறந்த சில வாரங் களுக்குப்பின் பூ ஸ் ட்’ எனும் மருந்தை வாய் மூலம் கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட கால இடை