பக்கம்:சிற்றம்பலம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதுவோ அருள்? 21

என்று வருகிறது. விலையுடை அருந்தமிழ் என்பது, 'மதிப்பையுடைய பிறராற் பாடற்கரிய தமிழ் என்று பொருள் படுவதாகக் கொள்ளலாம். அப்படியின்றி ஆயிரம் பொன் பெற்றதை கினைந்து இப்படிப் பாடியதாகக் கொண்டு, பொருளே விலையாகப் பெற்ற அருந்தமிழ்" என்று பொருள் உரைக்கவும் இடம் உண்டு.

  • தோணிபுரத்து, இறையவ ளுர்சொன்ன செந்தமிழ்க் காக இனிகளித்த, நிறையுல வாக்கிழிச் செம்பொற் றனம்' (திருவாவடு துறைக் கோவை, 153) என்பதில் சம்பந்தர் பெற்ற பொருள் பாட்டுக்குரிய பரிசென்பது குறிப்பாகத் தெரிகின்றது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/31&oldid=563174" இலிருந்து மீள்விக்கப்பட்டது