பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

பட்ட நகை வியாபாரியே இப்பிறப்பில் பொற்கொல்லனாகப் பிறந்தான். நீ பதினான்காம் நாள் நின் கணவனைக் கண்டு களிப்பாய்.” என்று கூறி மறைந்தது.

கண்ணகி விண்ணகம் புகுதல்

கண்ணகி அக்கதையைக் கேட்டுப் பெருமூச்சு விட்டாள்; “என் காதலனைக் காணாதவரை என் மனம் அமைதி அடையாது” என்று கூறி, நகரத்தின் மேற்கு வாயிலை அடைந்தாள், அங்கு இருந்த துர்க்காதேவியின் கோயிலில். “கிழக்கு வாசலில் கணவனோடு வந்தேன்: மேற்கு வாசலில் தனியே செல்கிறேன்” என்று வருந்திக் கூறித் தன் பொன் வளையல்களை அங்கு உடைத்து எறிந்து, மேற்கு. நோக்கிச் சென்றாள்; இரவு பகல் என்பதனைக் கவனியாமல் வைகையாற்றின் ஒரு கரைமீது நடந்து சென்றாள்; பதினான்காம் நாள் ஒரு மலை மீது ஏறி, வேங்கை மர நிழலில் நின்றாள். அப்பொழுது தேவர் உலகத்தில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அதனில் கோவலன் இருந்தான். அவனுடன் கண்ணகி விண்ணகம் புகுந்தாள்.


13. சேரன்-செங்குட்டுவன்

செங்குட்டுவன்

கண்ணகி வானுலகம் செல்வதற்கு நின்றிருந்த மலை, சேர நாட்டைச் சேர்ந்தது அக்காலத்தில் சேர நாட்டைச் சேரன்-செங்குட்டுவன் என்பவன் அரசாண்டு வந்தான். அவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற சேரப் பேரரசனுக்கு