66
பரவுதல் வேண்டும். அவள் தெய்வமாகத் தொழத் தக்க தகுதியுடையவள்,” என்று பதில் அளித்தாள்.
சேரன் செய்த முடிவு
உடனே சேரர் பெருமான் அமைச்சரைப் பார்த்தான. அமைச்சர் அரசனைப் பணிந்து, “அரசே, பத்தினிக்குரிய கல்லைப் பொதிய மலையிலிருந்து கொணர்ந்து காவிரியில் நீராட்டலாம்; அல்லது இமயத்திலிருந்து கொணர்ந்து கங்கையில் நீராட்டலாம் தேவரீர் விருப்பப்படி இரண்டில் ஒன்றைச் செய்யலாம்” என்றனன். அரசன், “அமைச்சரே, நமது தாயார் பொருட்டு நாம் இமயம் சென்றபோது ஆரியமன்னரை வென்றோம் அல்லவா? அவர் மரபினர் ‘அச்சேரன் இப்பொழுது இங்கு வரட்டும்; பார்ப்போம்’ என்று வீரம் பேசுகின்றனராம் ஆதலால் நாம் இமயம் சென்று கல்லைக் கொணர்வதே தக்கது. நமது வடநாட்டு யாத்திரையை மாநகரத்தார்க்கு அறிவித்திடுக. இச்செய்தி பல நாட்டு ஒற்றர் மூலம் பல நாடுகட்கும் பரவி விடும். நம் நண்பரான நூற்றுவர் கன்னர்க்கும்[1] அறிவித்திடுக நாம் அவர்கள் உதவி கொண்டே கங்கையாற்றைக் கடக்கவேண்டும்” என்றான். பின்னர் யாவரும் வஞ்சி மாநகரத் திற்குத் திரும்பினர்.
14. பத்தினிக் கோவில்
வடநாட்டு யாத்திரை
சேரன்-செங்குட்டுவன் குறித்த நாளில்-குறித்த நல்ல நேரத்தில் தன் பரிவாரங்கள் சூழ வஞ்சி
- ↑ நூற்றுவர், கன்னர், சதகர்ணி என்ற பட்டமுடைய ஆந்திர மன்னர் ஆவர்.