பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள் அ.சினிவாசன்

39



இளங்கோவடிகள் தொடர்ந்து,

"அறவோர் பள்ளியும், அறனோம் படையும்
புறநிலைக் கோட்டத்துப் புண்ணிய தானமும்"

என்றும் அருகர் புத்தர் பள்ளிகள் அறத்தைப் போற்றும் அறச்சாலைகள் ஆகியவற்றில் அறம் போதிக்கும் சிறப்புகளும் நடைபெற்றதைப் பற்றியும் குறிப்பிட்டு சிறப்பாகக் கூறுகிறார்.

"திறவோர் உரைக்கும் செயல் சிறந்தொருபால்" என்று அறவோர் பள்ளிகள் மற்றும் அறச்சாலைகளின் பணிகளைப் பற்றி சிறப்பித்துக் கூறியுள்ள போதிலும், நாட்டு மக்களிடையில் பழக்கத்தில் உள்ள வழிபாடுகளையும் விழாக்களையும் மிகவும் விரிவுபட அடிகளார் கூறுவதைக் காண்கிறோம்.

அதில் வேதங்களில் குறிப்பிட்டுள்ள முக்கிய கடவுளர்களையும், தேவர்களையும் கணங்களையும் பற்றியும் கூறுவதைக் காண்கிறோம்.