தமிழும் தமிழ்நாடும் 269
ஏழாம் பத்தில், “கறவா மடநாகு" என்னும் தலைப்பில் தொடரும் பாடல் தொகுப்பில் வண்டார் பொழில்சூழ் நறையூர் நம்பிக்கு என்றும், தொண்டாய்க் கலியனொலி செய் தமிழ்மாலை தொண்டீர் : இவைபாடுமின் பாடி நின்றாட உண்டே விசும்பு உந்தமக்கில்லை துயரே என்றும் பாடுகிறார். -
"தந்தை காலில்” என்று தொடங்கும் பாசுரத் தொகுதியில்
“நெல்லில் குவளை கண்காட்ட
நீரில் குமுதம் வாய்காட்ட அல்லிக் கமலம் முகம்காட்டும்
கழனி யழுந்துார் நின்றானை வல்லிப் பொதும்பில் குயில்கூவும்
மங்கை வேந்தன் பரகாலன் சொல்லில் பொலிந்த தமிழ்மாலை சொல்லப் பாவம் நில்லாவே"
என்று பாடுகிறார். =
"திருவுக்கும் திருவாகிய செல்வா என்று தொடங்கம் பாசுரத் தொகுதியில்
"அன்ன மன்னுபைம் பூம்பொழில் சூழ்ந்த
அழுந்துார் மேல்திசை நின்றவம் மானை கன்னி மன்னுதிண் டோள்கலி கன்றி
ஆலி நாடன்மங் கைக்குல வேந்தன் சொன்ன இன்தமிழ் நன்மணிக் கோவை
து.ாய மாலை இவைபத்தும் வல்லார் மன்னி மன்னவ ராயுல காண்டு
மான வெண்குடைக் கீழ்மகிழ் வாரே! என்று பாடி மகிழ்கிறார்.
எட்டாம் பத்தில் சிலையிலங்கு பொன்னாழி என்று தொடங்கும் பாசுர வரிசையில்
"மாவளரும் மென்னோக்கி மாதராள்
மாயவனைக் கண்டாள் என்று காவளரும் கடிபொழில்சூழ் கண்ணபுரத்
தம்மானைக் கலியன் சொன்ன