பக்கம்:சிலம்பின் கதை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

சிலம்பின் கதை



கொள்ளாக் காட்சி இங்கு நமக்கு இவர்” என்று கூறிப் பாராட்டி மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவலன் கழிவிரக்கம்

அவன் உணவு உண்டு இனிது இருந்தான். அவனுக்கு வெற்றிலையும் பாக்கும் தந்தனள். அவற்றைத் தந்த கண்ணகியை அருகில் அழைத்தான். “உன் மெல்லடிகள் கற்கள் பொருந்திய வழியை எவ்வாறு கடக்க முடிந்தன?” என்று கூறிக் கொடிய காட்டுவழியில் அவளை அழைத்து வந்ததற்காக வருந்தினான். “எம் பெற்றோர்கள் இதற்காக வருந்தியிருப்பார்கள்; எல்லாம் புதிராக இருக் கிறது, இது வினையின் விளைவோ அறியாமல் திகைக் கின்றேன். வறுமொழியாளருடனும், புதிய பரத்தை யருடனும் திரிந்து கெட்டேன். அவர்கள் நகைச்சிரிப்பு என்னைப் பாழ்படுத்தியது; அறிஞர் பெருமக்கள் அறிவுரை களை மறந்தேன். எனக்கு நன்னெறியே அமையாது; தீமை செய்து உழன்றேன்; எனக்கு நன்மையே வாய்க்காது”.

“என் பெற்றோர்கள் இருவருக்கும் அவர்கள் முதிய பருவத்தில் பணிவிடை செய்யவேண்டும்; அதை மறந்து விட்டேன்; பிழைபல செய்துவிட்டேன்; பேரறிவு படைத்த உனக்கும் தீமை செய்து விட்டேன்; எண்ணிப்பார்க்க வில்லை; அவசரப்பட்டு உன்னையும் உடன்வருக என்று கூறிவிட்டேன்; இது தவறு என்று எண்ணாமல் செயல்பட்டு விட்டேன்; “மாநகர்க்கு இங்கு வருக” என்று கூறினேன். அது எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்பொழுது உணர்கிறேன்; “எழுக” என்றேன்; உடன் மறுப்புக் கூறாமல் உடன் வந்துவிட்டாய்; நீ செய்தது அதை நினைத்துப் பார்க்கிறேன்; நீயாவது தடுத்து இருக்கலாம்; அதைச் செய்யாது விட்டாய்” என்று கழிவிரக்கம் காட்டி மனம் நெகிழப் பேசினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/105&oldid=936419" இலிருந்து மீள்விக்கப்பட்டது