பக்கம்:சிலம்பின் கதை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

சிலம்பின் கதை



நின் நகர் புகுந்தான். என் காற்சிலபைக் காசாக்க வந்தவனை மாசு ஆக்கி உயிர் பறித்தாய்; கொலைக்களப்பட்டான். அக் கோவலன் மனைவி நான்; கண்ணகி என்பது என் பெயர்” என்று கூறினாள்.

“கள்வனைக் கொன்றது கடுங்கோல் அன்று; அரசனது கடமை” என்று அறிவித்தான் அரசன்.

“நற்றிறம் படராக்கொற்கை வேந்தே! என் காற்சிலம்பு மாணிக்கப்பரல்கள் கொண்டது” என்று எடுத்துக் கூறி னாள்; சுற்றி வளைத்துப் பேசாமல் நேராக வழக்கை அவள் எடுத்துப் பேசினாள்.

“எம் சிலம்பு முத்துப்பரல்கள் கொண்டது” என்று கூறியவனாய் அரசன் அதனைக் கொண்டு வந்து முன் வைக்கச் சொன்னான்.

கண்ணகி முன் சிலம்பினை வைக்க அதனை அவள் உடைக்க அதிலிருந்து பரல் ஒன்று தெறிக்க அது மன்னன் வாய் இதழில் பட்டது; மணி கண்டான்; அவ்வளவுதான், வாய்ச் சொற்கள் அடங்கி விட்டன. மனம் தளர்ந்தான்; அவன் செங்கோன்மை சீர்அழிந்தது; அவன் வெண் கொற்றக் குடை சாய்ந்தது.

“பொன் செய் கொல்லன் தன் சொல் கேட்ட யானோ அரசன்! யானே கள்வன்; என்னால் இம்மரபு மாசுபட்டது; கெடுக என் ஆயுள்” என்று கூறித் தன் உயிரை விட்டான். அவன் இன்றித் தான் வாழ முடியாது என்பதை உணர்ந்து அரசி நடுங்கியவளாய் அவன் இணையடி தொழுது வீழ்ந்தனள், அவளும் அவனோடு உயிர்விட்டாள்.

கண்ணகி கடுஞ்சினம்

“தீமை செய்தவரை அறக்கடவுள் வாட்டும் என்பது இப்பொழுது உண்மை யாயிற்று” என்று கூறியவளாய்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/127&oldid=936444" இலிருந்து மீள்விக்கப்பட்டது