பக்கம்:சிலம்பின் கதை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீர்ப்படைக் காதை

163



மாடலன் சோழர் தம் முன்னோர்களின் பெருமை யைக் கூறி “அத்தகைய மரபில் வந்தவன் சோழன் கிள்ளிவளவன்; அவன் நாட்டில் எந்தக் குறையும் இல்லை” என்று அறிவித்தான்.

“விண்ணவர் வியக்க எயில் மூன்றினை அறுத்து எறிந்து வெற்றிச் சிறப்புடையவன் சோழன் செம்பியன்; வீரத்துக்கு அவன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. புறாவின் உயிரைக் காக்கத் தன் உடம்பினை அறுத்துக் கொடுத்துப் பருந்தின் பசியைத் தீர்த்தவன் சிபிச் சோழன்; அவன் அருளுக்கு ஒர் அடையாளமாக விளங்கியவன். வீரமும் அருளும் மிக்க செங்கோல் வேந்தர்கள் ஆண்ட நாடு சோழநாடு; அத்தகைய சிறப்பு மிக்க நாட்டை ஆள்பவன் செங்கோல் வழுவுவது இயலாது; அவன் ஆட்சி செம்மையாக நடைபெறுகிறது” என்பதை எடுத்துக் கூறினான்.

பொன்னை அளித்துப் பாராட்டு

காவிரி புரக்கும் நாட்டவன் ஆட்சி சிறப்பாக உள்ளது என்று முப்புரி நூலோன் எடுத்துக் கூற அவன் மடுத்துக் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி கொண்டான். நாடுகள் பல திரிந்து நலம் அனைத்தும் நவின்ற அந்தணாளனை மதித்துச் செங் கோல் வேந்தனாகிய சேரன் செங்குட்டுவன் அவனுக்குப் பொன் அளந்து கொடுத்துச் சிறப்புச் செய்தான். தன் எடைக்கு நிகராக ஐம்பது துலாம் நிறையளவு பொன் கட்டிகளை அவனுக்கு அட்டியின்றித் தந்தான். இதனைத் துலாபாரம் புகுதல் என்று கூறினர்.

கனகவிசயரை அனுப்பி வைத்தல்

ஆடகப் பைம்பொன் மாடலனுக்கு அளித்தபின் உடன் வந்து உதவிய ஆரிய மன்னர் நூற்றுவர் கன்னரைத் தம் நாடுகளுக்குச் செல்க என்று விடை தந்து அனுப்பி வைத்தான். அதன்பின் சிறைப் பிடித்து வந்த அரச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/164&oldid=936484" இலிருந்து மீள்விக்கப்பட்டது