பக்கம்:சிலம்பின் கதை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துணைப் பாத்திரங்கள்

209



கவுந்தி அடிகள் கோவலன் கண்ணகியோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். வழிப்பயணத்துக்குத் துணையாகிறார். சோர்ந்தபோது எல்லாம் ஆறுதல் கூறுகிறார். கண்ணகியை மிகவும் பாராட்டுகிறார். 'தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி' என்றும், 'கற்புடைத் தெய்வம்' என்றும் பாராட்டுகிறார். மாதவியிடம் அடைக்கலமாக இருவரையும் ஒப்படைக்கிறார். துறவியாக இருந்த அவர் சமண அற நெறிகளை மற்றவர்க்கு அறிவிப்பதும் தம் தொழிலாகக் கொள்கிறார்.

கண்ணகிக்குத் தோழி ஒருத்தி அமைகின்றாள் தேவந்தி என்பாள்; பார்ப்பனப் பெண்; பாசாண்டச் சாத்தனை மணந்து அவனால் துறக்கப்பட்டவள்; ஆறுதலைத் தர விழைகிறாள்.

சோமகுண்டம், சூரிய குண்டம் முழுகிக் காமனைத் தொழுதால் கணவனை அடைவர் என்று கூறுகிறாள். 'பீடு அன்று' என்று கண்ணகி மறுத்துக் கூறிவிடுகிறாள்; இரண்டு கலாச்சாரங்கள் முரண்பாடு இவர்கள் உரையாடல்களில் கவிஞர் பெற வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. பின்பு கண்ணகியின் மறைவிற்குப் பிறகு செய்தி கேட்டுத் துடிதுடித்துக் காவற் பெண்டையும் அடித் தோழியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்குச் செல்கிறாள். அங்கு ஐயையையும் அழைத்துக்கொண்டு சேரநாடு செல்கிறாள்; நெடுவேள் குன்றம் சென்று அடைகிறாள். அங்கு கண்ணகி முன் நின்று தெய்வம் உற்றுப் பேசுகிறாள்; பாசாண்டச் சாத்தன் அவள் மீது ஏறிப் பேசுகிறான்; அடுத்துக் கண்ணகி தேவந்தி மேல் வந்து இளங்கோவடிகளோடு பேச வைக்கிறார் தேவந்தியே முன்னிருந்து பூசைவழிபாடு செய்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/210&oldid=936532" இலிருந்து மீள்விக்கப்பட்டது