பக்கம்:சிலம்பின் கதை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

சிலம்பின் கதை



பின்வருமாறு கூறுகிறார் தீதிலள், முதுமகள், செவ்வியள்; அளியள் என்று கூறுகிறார்.

மாதரி கண்ணகி கோவலனுக்கு அடைக்கலம் தந்து ஆதரவு தருகிறாள். தங்குவதற்கு இடம், உண்பதற்கு உணவு தந்து உதவுகிறாள்; தன் மகள் ஐயையைத் துணைக்கு அனுப்பி வைக்கிறாள். கோவலன் தாய் போல் இருந்து அன்பு காட்டுகிறாள். கோவலன் கண்ணகியரைக் 'கண்ணன்' என்றும் 'நப்பின்னை' என்றும் கூறி அவர்களை மதிக்கிறாள். அவர்கள் அன்பு வாழ்க்கைக்கு இவள் அகம் குளிர்கிறாள். அவர்கள் சாவுச் செய்தி இவளை அதிர வைக்கிறது. உயிர் விட்டு விடுகிறாள்.

ஐயை கண்ணகிக்கு நாத்துண் நங்கைபோல உறவு காட்டி உடன் இருந்து உதவுகிறாள். மணமே செய்து கொள்ளாமல் வாழ்க்கையை வெறுத்துத் தனிமரமாகி நின்று விடுகிறாள். முதிர் கன்னியாக முற்றுப் பெறுகிறாள்.

இந்தத் துணை மாந்தர்கள் இவர்களோடு நெருக்கம் கொண்டு உதவுகிறார்கள். அவலத்தால் பாதிக்கப்படு கிறார்கள். இவர்கள் நல்லவர்கள், அறிவாளிகள், துறவிகள், அந்தணர்கள் என்று பல திறத்தவராய் விளங்குகிறார்கள்.

இந்தக் காவியத்தில் இடம் பெறும் பாண்டியன், சேரன், செங்குட்டுவன் முதலானோர் வரலாற்று மாந்தர்கள். அவர்கள் கவிஞனின் படைப்புகள் அல்லர். எனவே அவர்களைத் துணை மாந்தர்கள் என்று கூற இயலாது.

இந்தக் காவியத்தில் தீயவரே இடம் பெறவில்லை. பொற்கொல்லன் ஒருவன்தான் தீயவன் ஆகிறான்; அடுத்தது ஊழ்வினை கதைத் திருப்பங்களுக்குத் துணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/213&oldid=936535" இலிருந்து மீள்விக்கப்பட்டது