பக்கம்:சிலம்பின் கதை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

சிலம்பின் கதை


அதே போல இந்த முடங்கலும், அதன் செய்திகளும் போலிகள் என்று கூறி மறுத்தான்.

வசந்த மாலை அவள் என்ன செய்யமுடியும்? வாடிய உள்ளத்துடன் சென்றாள். மாதவியால் வந்து செய்தியை அறிவித்தாள். “இன்று மாலை வராவிட்டாலும் அவரை நாளைக் காலையில் காண்போம்” என்று நம்பிக்கையுடன் அன்று மாதவி துயிலின்றிக் கழித்தாள்.


9. கோவலன் வீடு திரும்புதல்
(கனாத்திறம் உரைத்த காதை)

தேவந்தி அறிமுகம்

புகார்நகரம் மாலைப்பொழுது மங்கலமாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது; வீடுகள் பொலிவுடன் விளங்கின. வீட்டு முற்றத்தில் பூவும் நெல்லும் தூவி அழகுபடுத்தினர். வீடுகளுக்கு விளக்கேற்றி வைத்தனர். அந்த மாலைப் பொழுது தேவந்தி என்னும் பார்ப்பனப் பெண் கண்ணகிக்கு ஆறுதல் கூறத் தொடங்கினாள்.

இந்தத் தேவந்தி வாழ்க்கைப்பட்ட வீடு ஒரு பின்னணியைக் கொண்டு இருந்தது. இவளை மணந்தது பாசாண்டச் சாத்தன் என்னும் தெய்வம்; அந்த வீட்டில் அத்தெய்வம் ஆகிய சாத்தன் வளர்ந்து வயதுக்கு வந்து உரிய வாலிபப்பருவத்தில் இவளைமணம் செய்து கொண்டான். இது விசித்திரமான கதை.

மாலதி என்பவள் ஒருத்தி தன் மாற்றாளின் குழந்தைக்குப் பால் ஊட்ட அது விக்கிச் செத்தது. அந்தப் பழி தன் மீது வரும் என்று அஞ்சி அவள் ஊரில் உள்ள பல கோயில்களுக்கும் சென்று அக்குழந்தையைக் கிடத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/51&oldid=963753" இலிருந்து மீள்விக்கப்பட்டது