பக்கம்:சிலம்பின் கதை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வான் சிறப்பும் வாழ்த்தும்


திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்!
கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடை போன்று இவ்
அம்கண் உலகு அளித்த லான்
ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரிபோல் பொன்கோட்டு
மேரு வலந்திரித லான்.

மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!
நாமநீர் வேலி உலகிற்கு அவ்ன் அளிபோல்
மேல்நின்று தான்சுரத்த லான்.
பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்!
வீங்குநீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு
ஓங்கிப் பரந்தொழுக லான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/9&oldid=964035" இலிருந்து மீள்விக்கப்பட்டது