பக்கம்:சிலம்பின் கதை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊர் காண் காதை

91



கட்டுப்பட்டனர். அவர்கள் வில் போன்ற புருவத்து நெளிவுகளுக்கு ஆட்பட்டனர்.

அவர்கள் திலகச் சிறுநுதல் வியர்வை அரும்ப இவர்கள் கூடி மகிழ்வர். அவர்கள் ஊடல்கள் தீரும் வாய்ப்புகளை எதிர்நோக்கி அரசரும் வணிகச் செல்வரும் காத்து இருந்தனர்; வரிசையில் வந்து குழுமினர். இவர்களை மகிழ்விக்கும் மகளிர் வாழும் வீதி அதனைக் கண்டான்; அவனுக்கு இது புதுமையைத் தந்தது. அந்த நகர் களிப்புத்தருவது என்பதை அந்த ஊர் அவனுக்கு உணர்த்தியது.

கலைச் செல்வியர்

கலைகள் கற்றுப் பிறரைத் தம் கண்வலையில் ஈர்க்கும் கலைச் செல்வியர் வாழ்ந்த பகுதி உயர்வு பெற்றிருந்தது. சுடுமண் ஆகிய ஒடுகளால் வேயப்படுவதற்கு மாறாகப் பொன் தகடுகளால் வேயப்பட்ட காவல் மிக்க வீடுகள் அவை. முடி அரசர்கள் அங்கு வந்து ஒடுங்கிக் கிடப்பர். உள்ளே இருப்பது கள்ள வாழ்க்கை; அதனை மறைத்துத் தரும் காவல் மிக்க வீடு; தலைக்கோல் பட்டம் பெற்ற அரங்கக் கூத்தியரும், வாரம்பாடும் தோரிய மகளிரும், தலைப்பாட்டுப் பாடும் கூத்து மகளிரும், இடைப்பாட்டுப் பாடும் கூத்து மகளிரும் என நால்வகைப் பட்ட மாதர் அங்கு வாழ்ந்து வந்தனர். அவர்களில் பலர் அரசனால் ஆயிரத்து எண் கழஞ்சு பரிசு பெற்றுப் பாராட்டுப் பெற்றவர்கள். நகரத்து மேல்நிலைக் கலைச் செல்வியர்கள் அவர்கள்; அறுபத்து நான்கு கலைகளையும் கற்ற காரிகையர் ஆவர்.

கலை வாழ்க்கை வாழும் கணிகையராக அவர்கள் திகழ்ந்தனர்; விலைவாழ்க்கையையும் அவர்கள் ஏற்று நடத்தினர். அவர்கள் கண்வலையில் பட்டு அறிவு மயங்கி நறவு மகிழ்பவர் போல அங்கே வந்து செறிவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/92&oldid=936405" இலிருந்து மீள்விக்கப்பட்டது