பக்கம்:சிலம்பின் கதை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

சிலம்பின் கதை



கோவலன் கனவு

மாடலன் பரிவுடன் பேசிய பாங்கு கோவலன் உள்ளத்தை உடைத்து அவன் உணர்வை வெளிப் படுத்தியது. வாழ்க்கை அச்சம் அவனைக் கைக் கொண்டது. தான் கண்ட கனவினை மாடலனிடம் கூறிப் பகிர்ந்து கொண்டான்; “குறுமகன் சூழ்ச்சியால் தான் பெறு துயர் இது” என்று நவின்றான்; கனவின் விளக்கம் இது: “கண்ணகி நடுங்கித் துயர் அடைகிறாள்; அவன் எருமைமீது ஊர்ந்து செல்கிறான்; அவன் ஆடையை மற்றவர்கள் பறித்துக் கொள்கின்றனர்; கண்ணகியும் அவனும் பற்று நீங்கியோர் அடையும் வீட்டு உலகை அடைகின்றனர். மாதவி மணிமேகலையைத் துறவியாக்குகிறாள்; மன்மதன் தன் வில் அம்பினை வெறு நிலத்தில் வீசி எறிகிறான். மணிமேகலை மாபெரும் துறவி ஆகிறாள்” நனவில் காண்பது போல் இக்கனவு அவனுக்கு அமைந்தது. அதனை மாடலனிடம் எடுத்து உரைத்தான்.

இனி அடுத்து அவர்கள் அங்கு அவ் அறப்பள்ளியில் தங்க இயலாது என்று இருவரும் எடுத்து உரைத்தனர். “வணிகப் பெருமக்கள் உங்களை ஏற்று உபசரிப்பர்; அதனால் இப்புறநகர் விட்டுக் கதிரவன் மறைவதற்கு முன் அக நகர் செல்வதுதான் தக்கது” என்று கூறினர்.

மாதரி வருகை

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில் அங்கு இடைக் குலமடந்தையாகிய மாதரி என்பாள் வந்து சேர்ந்தாள்; அந்த மதிலின் பக்கத்து ஊரில் இயக்கியாகிய தெய்வத்துக்குப் பால்சோறு படைத்து விட்டுத் திரும்பினாள். அவள் கவுந்தியடிகளை மதிப்பின் காரணமாக வணங்கி எழுந்தாள் “இவள் பசுவைக்கொண்டு பால் விற்று வாழ்க்கை நடத்து பவள் எந்தக் கொடுமையும் அறியாதவள்; தீமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/99&oldid=936413" இலிருந்து மீள்விக்கப்பட்டது