பக்கம்:சிலம்புநெறி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி 107

திருக்கும்பொழுது, மாதவி கோவலன் கையில் யாழினைக் கொடுத்து மீட்டிப்பாடச் சொல்கிறாள். கோவலனும் மாதவி மனம் மகிழ யாழினை இசைத்துப் பாடுகிறான். கோவலன் பாடிய பாடலில் யாதும் உள் நோக்கம் இல்லை. ஆயினும்; கோவலன் பாடிய,

திங்கள் மாலை வெண்குடையான்

சென்னி செங்கோ லதுவோச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி கங்கை தன்னைப் புணர்ந்தாலும்

புலவா தொழிதல் கயற்கண்ணாய் மங்கை மாதர் பெருங்கற்பென்(று)

அறிந்தேன் வாழி காவேரி!

சேரல் மட அன்னம்: சேரல் நடை ஒவ்வாய்1 சேரல் மட அன்னம் சேரல் கடை ஒவ்வாய்! ஊர் திரைநீர் வேலி உழக்கித் திரிவாள் பின் சேரல் மட அன்னம்! சேரல் நடை. ஒவ்வாய்!

முதலிய பாடல்கள் மாதவியிடம் ஊடல் தோன்றுவதற்குக் காரணமாயின. மாதவி, கோவலன் அயற்பெண் ஒருத்தி -யிடம் கொண்ட காதற் குறிப்பில் பாடுகிறான் என்ற எண்ணத்தில் உள்ளம் ஊடினாள். .

மாதவி தன் ஊடலை முகக்குறிப்பில் ஒதுங்கி நிற்றல் முதலிய வழிகளில் புலப்படுத்தியிருந்தால் கோவலன் மாதவியின் ஊடற் குறிப்பை உணர்ந்திருப்பான். மாதவியின் ஊடலையும் மாற்ற முயற்சி செய்திருப்பான்.

ஆனால், மாதவி தன் ஊடலை வெளிப்படையாக உணர்த்தாது கோவலனைப் போலவே குறிப்புப் பொருள் வைத்துப் பாடினாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/109&oldid=702772" இலிருந்து மீள்விக்கப்பட்டது