பக்கம்:சிலம்புநெறி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

நல்லோருடன் கலந்து செய்யாததால் எங்கும் முறைப் பிறழ்ச்சி!

உழைப்பவர் வருந்துவர்; உறிஞ்சும் உலுத்தர்கள் வாழ்வர்: உழைப்புக்கு உரிய ஊதியம் கிடைக்காததால் உழைப்பாளர் வருந்துவர்; உற்பத்தி குறையும்; வறுமை வளரும்; ஆறலை கள்வர் தோன்றுவர்; களவும் கலகமும் வளர்ந்து அமைதிச் சூழ்நிலையை கெடுக்கும்; அரசியல் என்பது இல்லாததுபோல நாடு காட்சி தரும்.

அரசியல் முறை பிறழ்ந்த நாட்டில் அவலம் பெருகும்; அந்த நாடு, பாலை நிலம் போல விளங்கும்; நிலத்தின் வகையில் பாலை நிலம் கிடையாது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நிலம் நான்கு வகையினதே.

இயற்கையின் தலைமைக் கோள் ஞாயிறு தம் நிலை கெடுதலால், வளம் கொழிக்கும் குறிஞ்சிநிலம் வளம் குன்றுகிறது. முல்லை நிலம் முழுதும் கெடுகிறது. வளம் மிக்க தம் இயல்பைக் குறிஞ்சியும் முல்லையும் இழந்து விடுகின்றன. காதலுக்கும் களிப்புக்கும் உரியதாயிருந்த இந்நிலங்கள் மக்களுக்குத் துன்பம் தரும் பாலை நிலமாகி விடுகின்றன.

சிறந்த அரசியல் முறை இல்லாத நாட்டில் இன்பம் இல்லை; அமைதி இல்லை; பாதுகாப்பு இல்லை. இத்தகு இழிநிலை வயப்பட்ட அரசைப்பெற்றுள்ள நாடு, பாலை வனம் போன்றது. இதனை இளங்கோவடிகள் எடுத்துக் கூறுவதறிக.

“கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி
வேத்தியல் இழந்த வியனிலம் போல
வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தான்லர் திருகத் தன்மையிற் குன்றி”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/20&oldid=1373559" இலிருந்து மீள்விக்கப்பட்டது