பக்கம்:சிலம்புநெறி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

வாழ்க்கைக்குப் பொறிகளும் புலன்களும் துய்ப்பன வும் கிடைத்தது எதற்கு? உண்டு, கூடிக் களித்து மகிழ மட்டுமா? இல்லை; உய்யும் நெறியில் செல்லத்தான்! ஆற்றல் மிக்க அறிவு வாயில்கள், இன்று, பயனற்று காமக் களியாட்டங்களுக்கும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் ஆகிய தீமைகளை வளர்ப்பதற்குமே பயன்படுகின்றன.

இன்று, எங்கும், குடும்பம், சுற்றம், சமூகம், நாடு என்ற பாங்கு வளரவில்லை. வாழ்க்கையின் தனி உறுப்பு களாகிய காதல், நட்பு ஆகிய துறைகளும் செழிப்பாக இல்லை. இப்பொழுது ஒரே இலட்சியம் “பிழைத்துவிடு! எப்படியாயினும் பிழைத்துவிடு” என்பதுதான்!

அரசு அமைப்புக்கள். முதிர்ச்சியும், உயர் இலட்சியமும் உடையவர்களால் இயக்கப் பெறாமை யால் தேர்தல் போராகவே அமைந்துவிடுகிறது; ஒழுக்கச் சிதைவுகளும் வளர்ந்து வருகின்றன. ஆனால், இயல்பில் ஒழுக்கத் தவறில்லாத - ஆனால் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட ஒழுக்கத் தவறுகள் தண்டனைக்கு உள்ளாகின்றன.

ஏன் இந்த அவலம்? அதுவும் புகழ்பூத்த வரலாறு படைத்த தமிழ்நாட்டுக்கு!பாண்டிமாதேவியின் கற்புநலம் இந்த நாட்டின் தனிச்சிறப்பல்லவா? நாள்தோறும் வரும் செய்திகள் இன்று ‘கற்பு’ என்பது கேலிக்குரிய பொருளாகிவிட்டது, என்றே பறைசாற்றுகின்றன.

ஒரு காலத்தில் தேர்க்காலில் மைந்தனை இட்டு நீதி வழங்கியது அரசு. ஆனால் இன்று யாரையும் விசாரிக்கக் கூட இயலாமல் ஊர்க்காவல் நிலையத்தில் முற்றுகை! அரசியல் தலையீடுகள்; தப்பித் தவறி ஊர்க்காவல் நிலையத்தில் அகப்பட்டுக் கொண்டுவிட்டால் அங்கு விசாரணை இல்லை! சித்திரவதை மனச்சாட்சியுடையவர் தள் ‘காயம்பூ’வும் ‘இராச’னும் காவலர்களால் அடித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/22&oldid=1373601" இலிருந்து மீள்விக்கப்பட்டது