பக்கம்:சிலம்புநெறி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி - 77

-வுடன் வாழ்தல் கற்பு. இக் கற்புநெறி இருபாலுக்கும்

பொதுவே.

அதனால், தமிழகத்துப் பெண்கள் கணவன் மகிழ்தலுக்கே அழகு உடையவராக விளங்க விரும்புவர். கணவன் துய்த்து மகிழும் காலங்களுக்கு ஏற்றாற் போலவே ஒப்பனை செய்து கொள்வர், அதனாலன்றோ காரைக்கால் அம்மையார் தம் கணவன் தம் அழகு நலத்தினைத் துய்த்து மகிழ மறுத்தபோது துறந்தார்; பேய் வடிவம் கொண்டார்.

கண்ணகி வழி வழிச் சிறந்த குலத்தில் தோன்றிய குலமகள். மகளிர்க்குரிய இயல்பான குண நலன்கள் அனைத்தும் நிறைந்தவள். அதனாலன்றோ கோவலன் கண்ணகியை விட்டுப் பிரிந்து மாதவியிடம் சென்றபோது ‘வடு நீங்கு சிறப்பின் தன் மனையகம் மறந்து” என்று இளங்கோவடிகள் கண்ணகியைப் பெருமைப்படுத்து கின்றார்.

"தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்'

என்று தமிழ்மறை காட்டும். பெண்ணுக்கு இலக்கணமாக வாழ்ந்தவள் கண்ணகி. ஒரு பெண்ணின் கற்பை கணவன்காக்க முடியாது. கற்பு என்பது உடல் சார்பான ஒழுக்கம் மட்டுமன்று. பொதுவாக, ஒரு, பெண் தன் அழகு நலத்தினைப் பிறர் அதாவது பரத்தமைக் குணமுடைய ஆடவர் காண, கண்டு மகிழ வாய்ப்பளிக்கக் கூடாது.

அதுமட்டுமன்று. தான்ும் தன் தலைவனைத் தவிர வேறு ஆடவர் நலனை உள்ளத்தில் நினைத்து, காமுற்றுப் பாராட்டுதல் கூடாது. -

அதனாலன்றோ கற்புடைய மகளிர் பிறர் நெஞ்சு புகார்’ என்று சிறப்பித்துக் கூறுகிறது மணிமேகலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/79&oldid=702742" இலிருந்து மீள்விக்கப்பட்டது