பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

பெற்றால் இந்தக் குலத்துக்கே பெருமை. இந்த உறுதி மொழியை மாற்றுவது என்பது இனி இல்லை...... இதோ இப்போதே நான் இந்த அரண்மனையை விட்டுப்புறப்படுகிறேன். இனி எனக்கு இருப்பிடம் மடமோ, கோயிலோ ஆக இருக்கும்” என்று சொல்லிப் புறப்பட்டு விட்டார் இளங்கோ.

அமைச்சர்கள் எழுந்தார்கள்; அவரைத் தடுத்து விடவேண்டும் என்று எண்ணம். ஆனால் அவர்களுக்குத் துணிவில்லை. அரசன், “என் செல்வா, என் கண்ணே!” என்று அழைத்தானேயன்றி மேலே பேச முடியாமல் தடுமாறினான். செங்குட்டுவன் அலங்க மலங்க விழித்தான்.

இந்தக் கலவரத்தினிடையே, சோதிடம் கூறின பேர்வழி எப்படியோ, பெற்றேன் பிழைத்தேன் என்று ஒருவரும் அறியாமல் நழுவி விட்டார்.

அரண்மனையே துயரக் கடலில் மூழ்கியிருந்தது.