பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

97



6. வேலைப்பாடு மிக்க ஓவியம் எழுதிய மேற்கட்டி அமைத்தல்.

7. திங்கள் - வியாழன் - செவ்வாய் ஆகிய நாட்களில் முறையே வெண்மை - பொன்மை - செம்மை நிற முத்து மாலைகள் சரியும் தூக்கும் தாமமுமாகத் தொங்கி அசைய விடுதல் - ஆகியவை அரங்கத்தில் செய்யப்பட்டிருக்க வேண்டிய அமைப்புகளாகும்.

9. தலைக்கோல் இயல்பு

1. பகையை வென்று கொண்டு வந்த குடைக் காம்பு தலைக்கோலாதல் வேண்டும்.

2. கோலின் கணுக்களில் ஒன்பான் மணிகளும், இடையிலே சாம்பூநதப் பொன் தகடும் பதித்து வைத்திருத்தல்.

3. மன்னனின் அரண்மனையில் தலைக்கோல் வைப்பதற்கென்று தனி இருப்பிடம் அமைத்தல்.

4. தலைக்கோலைச் சயந்தனாக எண்ணி மறைவழி வழிபடல்.

5. நல்ல நாளிலே, தெய்வ ஆற்று நீரைப் பொற் குடத்தில் கொணர்ந்து தலைக்கோலை நீராட்டல்.

6. மாலை அணிதல் முதலிய அணிகள் செய்தல்.

7. யானை வர, முரசு முழங்க, அரசனும் ஐம்பெருங் குழுவும் உடன் இயங்க, தேரும் யானையும் கொண்டு வந்து, தேரில் நிற்கும் பாடகன் கையில் தலைக்கோலைத் த்ந்து, தேரினை நகர்வலம் வரச் செய்தல்.

8. அரங்கம் அடைந்ததும் தலைக்கோலை எதிர் முகமாக வைக்க வேண்டும்.

9. பின்னரே நடம் ஆடல் தொடங்க வேண்டும். இவையெல்லாம் தலைக்கோல் தொடர்பான நிகழ்ச்சிகளாகும்.