பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

சுந்தர சண்முகனார்



10. ஆடும் இயல்பு

1. ஆடல் நிகழ்வதற்கு முன் அரசர், அமைச்சர் முதலியோர் அவரவர் இடத்தில் அமர வேண்டும்.

2. ஆடும் இடம் மூன்று கோல் - ஆட்டுவார்க்கு ஒரு கோல் - பாடுநர்க்கு ஒரு கோல் - அந்தரம் ஒரு கோல் - குயிலுவர் நிலையிடம் ஒரு கோல் - ஆக, ஒவ்வொன்றுக்கும் இந்த அளவு இடம் இருக்கவேண்டும்.

3. மாதவி வலக்காலை முதலில் வைத்து அரங்கம் ஏறினாள்; வலப்பக்கத் தூணிடத்தே பொருமுக எழினி , பக்கம் சேர்ந்தாள்.

4. தோரிய மடந்தையர் இடத்துரண் அயலே ஒருமுக எழினிப்பக்கம் சேர்ந்தனர்.

5. இவர்கள் தீமை நீங்கி நன்மை உண்டாகுக எனத் தெய்வத்தை வேண்டிப் பாடல் வேண்டும் . ஒரொற்று வாரம், ஈரொற்று வாரம் ஆகிய இரண்டும் பாடலாம்.

6. பாடல் இறுதியில் எல்லா இசைக்கருவிகளும் இசைக்கப்படல் வேண்டும்.

7. குழல்வழி யாழும், யாழ்வழி மிடறும் (வாய்ப் பாட்டும்) தண்ணுமையும், தண்ணுமைவழி குடமுழாவும் செயல்பட வேண்டும். இடக்கை என்னும் கருவி முழவோடு ஒன்ற வேண்டும்.

8. பருந்தும் நிழலும்போல் இசைக்கருவிகள் ஒன்றுக்கு ஒன்று ஒத்து இசைக்கவேண்டும். மற்றும் கருவிகளும் பாடலும் ஆடலும் ஒத்து இருக்கவேண்டும்.

9. இந்த அமைப்புகளுடன், மாதவி, பதினொரு பற்றாலே நாடக நூல் வழுவாது ஆடினாள்.

10. பாலைப் பண் அளவு கோடாதவாறு, உருவுக்கு ஏற்பச் சொற்படுத்தியும் இசைப்படுத்தியும் பாட்டும் கொட்டும் கூத்தும் ஒன்ற மாதவி ஆடல் செய்தாள்: