பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

99


11. முதல் நடையிலும் வாரத்திலும் தேசிக் கூத்தெல்லாம் ஆடினாள்;

12. மேற்கொண்டு வைசாக நிலையும் ஆடி முடித்தாள்;

13. பொற்கொடி போன்ற தோற்றத்துடன் நூல் முறை வழுவாமல், அவிநயம் - பாவம் தோன்ற, விலக் குறுப்பு பதினாலின் வழுவாமல் ஆடினாள்;

14. இவ்வாறு வெற்றிபெற ஆடியபின் தலைக்கோல் பட்டம் பெற்றாள்; அரங்கேற்றம் செய்யப்பட்டவளானாள். ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் பெறுமானமுள்ள பச்சைமாலையை மன்னனிட மிருந்து பரிசாகப் பெற்றாள்.

மேற்கூறியவற்றால், ஆடும் இயல்பு அறியப் பெற்றது.

இதுகாறும் மேலே அரங்கேற்று காதையில் அறிவிக்கப் பட்டுள்ள ஆடல் பாடல் கலைகள் தொடர்பான நிகழ்ச்சிகளுள் சிலவற்றைச் சுருக்கமாகப் பார்த்தோம். இவற்றை விரிப்பின் மிகவும் பெருகும். இனி மற்ற காதை களில் இடம்பெற்றுள்ள செய்திகள் சிலவற்றையும் மிகவும் சுருங்கக் காண்டாம்:

கானல் வரி மாதவி யாழை ஆய்வு செய்தாள்; செவியால் ஓர்ந்து பார்த்தாள்; இசை மீட்டிப் பார்த்தாள்; பின்னர்க் கோவலனிடம் தந்தாள். கோவலன் யாழ் வாசித்த பின் மாதவி வாசித்தாள்.

வேனில் காதை: கோவலன் பிரிந்த பின், மாதவி நிலா முற்றத்தில் வாயால் மேற்செம்பாலைப் பண் பாடினாள். அது மயங்கிற்று. பின் சகோட யாழ் கொண்டு அகநிலை மருதம், புற நிலை மருதம், அருகியல் மருதம், பெருகியல் மருதம் ஆகிய பண்களைப் பாடினாள் - இசை மயங்கிற்று.

புறஞ்சேரி இறுத்த காதை: கோவலன் பாணர்களுடன் யாழ் வாசித்தான். கோவலன் செங்கோட்டு யாழ்