14. பழக்க வழக்க மரபுகள்
சிலப்பதிகாரக் காலத்தில் மக்களிடையே நிலவி வந்த பழக்க வழக்கங்கள் அதாவது மரபுகள் சிலவற்றை அந்நூலில் கூறியுள்ளாங்குக் காணலாம்.
தலைக்கோல் நகர்வலம் வந்து வழிபாடு ஆற்றிய பின்னரே கணிகையரின் முதல் நடன அரங்கேற்றம் தொடங்கப்பெறும். (அரங்கேற்று காதை):
..................................................................
ஊர்வலம் செய்து புகுந்துமுன் வைத்து"
ஒரு மாளிகையில் புகும்போதோ - திருமண வீட்டில் முதலில் செல்லும்போதோ பெண்கள் வலக்காலை முதலில் எடுத்து வைப்பர். மாதவி அரங்கத்தில் வலக்காலை முதலில் வைத்து ஏறினாள்.
"வலக்கால் முன்வைத்து ஏறி அரங்கத்து"
கனா - நிமித்தங்களில் நம்பிக்கை உண்டு. கனாத்திறம் உரைத்த காதை என ஒரு காதையே உள்ளது.
"கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன"
இதனால் நிமித்த நம்பிக்கை உண்டென அறியலாம். மாதவி புணர்ச்சியில் இருந்ததால் அவள் கண்கள் செங்கண்களாகக் கூறப்பட்டன.