பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

115


பல சமயங்கள் இருந்தும், பலர் சமய வேறுபாடு இன்றி நடந்துகொண்டனர். கோவலன் கண்ணகியுடன் புகாரை விட்டுப் பிரிந்த வேளையில், திருமால், புத்தர், அருகர் ஆகியோரின் கோயில்களை வணங்கிச்சென்றானாம்.

"அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த

மணிவண்ணன் கோட்டம் வலஞ்செயாக் கழிந்து"
(10:9, 10)

"பணைஐந்து ஓங்கிய பாசிலைப் போதி (10:11)
இந்திர விகாரம் எழுடன் போகி" (10:14)
"ஐவகை கின்ற அருகத் தானத்து (10:18)

இலகொளிச் சிலாதலம் தொழு துவலங்கொண்டு" (10:25)

என்பன பாடல் பகுதிகள். முன்னது வைணவம். நடுவன்து புத்தம். மூன்றாவது சமணம். கோவலனுக்குச் சமிய வேறுபாடு இல்லை என்பது தெரிகிறது.

மற்றும் ஒன்று: சேரன் செங்குட்டுவன் வடபுலம் நோக்கிப் போருக்குப் புறப்பட்டபோது, வஞ்சியில் உள்ள சிவன் கோவிலை வணங்கி, அங்கே தந்த பூமாலையைத் தலையில் சூடிக் கொண்டானாம். பின்னர் திருமால் கோயிலுக்கு வந்தபோது, அங்கே தந்த பூமாலையைச் (சேடம்) தோளில் சூடிக்கொண்டானாம். இச்செய்தியைக் கால்கோள் காதையில் காணலாம்.

கோவலன் - கண்ணகி ஆகியோர்க்குத் திருமணம் நடைபெற்ற முறை ஒருவிதமானது. கண்ணகிக்குப் பன்னிரண்டாண்டு :(ஈராறு ஆண்டு அகவையாள்) அகவை யிலும், கோவலனுக்குப் பதினாறாவது (ஈரெட்டு ஆண்டு அகவையாள்) அகவையிலும் திருமணம் நடைபெற்றதாம். தொல்காப்பிய உரையாசிரியர்களும் இந்தக் கருத்தைக் கூறியுள்ளனர்: