பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

117


என்பது பாடல் பகுதி. அந்தக் காலத்து மேட்டுக் குடி மக்களிடையே இந்த மரபு இருந்தது. இப்போது நடக்குமா?

திங்கள் உரோகிணி விண்மீனுடன் சேர்ந்திருக்கும் நாள் நல்லநாளாம். அந்த நாளில் திருமணம் நடைபெற்றதாம். அசுவனி முதலிய இருபத்தேழு விண்மீன்களுள் உரோகிணியும் ஒன்று. இவை தக்கன் பெண்மக்களாம். இந்தப் பெண்களைத் திங்கள் மணந்து கொண்டானாம். இப்பெண் களுள் உரோகிணி என்னும் மனைவிமேல்தான் திங்களுக்குக் காதல் மிகுதியாம். இதனால் தக்கன் திங்கள்மேல் சினம் கொண்டானாம். இது புராணக்கதை. இதை வானநூல் புலமையுடன் நோக்கின் நிலைமை புரியும்.

கோவலனும் கண்ணகியும், மா முது பார்ப்பான் மறை வழி காட்டிடத் தீ வலம் செய்து திருமணம் செய்து கொண்டனராம். சாந்து, புகை, கண்ணம், விளக்கு, பாலிகை முளை முதலியன பெண்கள் எடுத்தனராம். மற்றும் மடந்தையர் வாழ்த்தி அருந்ததி அனைய கண்ணகியை அமளி ஏற்றினராம்.

"தீதுஅறுக எனஏத்திச் சின்மலர் கொடுதுவி
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல்லமளி ஏற்றினார்"
(1:62.64)

என்பது பாடல் பகுதி. அமளி ஏற்றினார் என்பதற்கு அமளியில் ஏற்றினார் என்று மட்டுமே உரையாசிரியர்கள் எழுதியுள்ளனர். நான் (சு.ச.) அச்சத்தோடு ஒரு கருத்து சொல்கிறேன்: திருமண நாள் அன்றிரவே அமளியில் - படுக்கையில் ஏற்றி முதலிரவு நடத்தச் செய்தனர் என்று சொன்னால் என்ன? அங்ஙனம் இல்லையெனில், இருக்கையில் அமரச் செய்தனர் என்றல்லவா கூறியிருக்க வேண்டும். அமளி என்பது படுக்கை யாயாயிற்றே. முதலிரவில் பெண்