பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

சுந்தர சண்முகனார்


அத்திரி = கோவேறு கழுதை, இதைக் குதிரை வகைகளுள் ஒன்று என்றும் கூறுவர். சில ஊர்க் குதிரைகள் கழுதைகள் போலவே இருக்கும். அத்தகையதோ இது!

கோவலன் தான் கண்ட கனவை மாடலனிடம் கூறி, இரவின் பிற்பகுதியில் கண்ட கனவு பலிக்கும் என்று கூறுகிறார்களே - அவ்வாறு தனக்கு ஏதேனும் திங்கு வருமோ என அஞ்சுகிறான்.

"கனவு போல நள்ளிருள் யாமத்துக்

கனவு கண்டேன் கடிதுஈங்கு உறும்என"
(15:105, 106)

நள்ளிருள் யாமம் என்பதற்குக் கடையாமம் எனச் சிலர் பொருள் எழுதியுள்ளனர். கடிது உறும் என்றால், விரைவில் பலித்து விடும் என்பதாம். நள்ளிருள் யாமம் என்பதற்கு நேர்ப் பொருள் கடையாமம் என்பதாகாது. கடிது உறும் என்பதைக் கொண்டு கடையாமம் எனப் பொருள் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு அகச்சான்று கனா நூலில் உள்ளது. முதல் சாமத்தில் கண்ட கனவு ஓராண்டில் பலிக்குமாம். இரண்டாம் சாமத்தில் கண்டது எட்டுத் திங்களில் (எட்டு மாதத்தில்) பலிக்குமாம். மூன்றாம் சாமத்தில் கண்டது மூன்று திங்களில் பலிக்குமாம். கடை யாமமாகிய நான்காம் சாமத்தில் கண்ட கனவோ பத்தே நாளில் பலித்து விடுமாம்.

"படைத்த முற்சாமம் ஓராண்டில்
பலிக்கும், பகர் இரண்டே
கிடைத்த பிற்சாமம் மிகுதிங்கள்
எட்டில் கிடைக்கும் என்றும்,
இடைப்பட்ட சாமமோர் மூன்றினில்
திங்களோர் மூன்றென் பவால்,
கடைப்பு,சாமமும் நாள்
பத்துளே பலம் கைபெறுமே" (3)