பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

சுந்தர சண்முகனார்


என்று வாழ்த்தி முடித்தனர். பன்னூறாயிரத்து ஆண்டு = பல இலட்சம் ஆண்டு. இலட்சம் என்னும் வடமொழி எண்ணுப் பெயருக்கு நேரான தமிழ்ப் பெயர் 'நூறாயிரம்' என்பது.

மாடலன் செங்குட்டுவனிடம் முன் நடந்ததைக் கூறத் தொடங்குமுன்

"மன்னவர் கோவே வாழ்க என்று ஏத்தி" (30.118)


என்று வாழ்த்தி, முடிக்கும் போதும்

"ஊழிதோ றுாழி உலகம் காத்து
நீடு வாழியரோ நெடுந்தகை"
(30:145, 146)

என்று வாழ்த்தி முடித்தானாம்.

மணிமேகலை ஆசிரியர் சாத்தனார் செங்குட்டுவனிடம் மதுரையில் நடந்ததைக் கூறி முடிக்கும் போது

"ஒழிவின்று உரைத்து ஈண்டு ஊழிஊழி
வழிவழி சிறக்ககின் வலம்படு கொற்றம்"
(25:91, 92)


என்று வாழ்த்தி முடித்தாராம். வில்லவன் கோதை செங்குட்டுவனிடம் செய்தி கூறத் தொடங்குமுன் சேரனை வாழ்த்தித் தொடங்கினானாம்:

"பல் யாண்டு வாழ்ககின் கொற்றம் ஈங்கென
வில்லவன் கோதை வேந்தற் குரைக்கும்"
(25:150, 151)


என்பது பாடல் பகுதி. அரசனிடம் பேசும்போது மட்டுமன்று; அரசனது கட்டளையைப் பறையறைந்து சொல்லும் போதும் அரசனை வாழ்த்துவது மரபு.

"வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை
ஊழிதோ றுாழி உலகம் காக்க"
(25:181, 182)


என்று பறையறைந்தோர் வாழ்த்திப் பின்னரே செய்தியை அறிவித்தனராம். இவ்வாறு அரசர்களை வாழ்த்துவது ஒரு மரபு.