பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15. இயற்கைக் காட்சிப் புனைவு

இலக்கியங்களில் இயற்கைக் காட்சிகளைப் புனைவு (வருணனை) செய்வது இயற்கை. இயற்கைக் காட்சிகளைப் புனைவு செய்தல் மட்டுமுள்ள சிறுசிறு நூல்களும் உண்டு. இந்நிலையில், சிலப்பதிகாரப் பெருங் (காப்பியத்தில் இயற்கைப் புனைவு இடம் பெற்றிருப்பதற்குக் கேட்கவா வேண்டும்!

மங்கல வாழ்த்துப் பாடல்: திங்கள் உலகளிக்கிறது. ஞாயிறு மேரு வலம் வருகிறது. மாமழை நீர் சுரக்கிறது.

மலை, கடல், ஆறு, முகில், பறவைகள், விலங்குகள், மர இனம், சோலை, நாடு - நகரம் முதலியவை சிலம்பில் அங்கும் இங்குமாகப் புனையப்பட்டுள்ளன.

நாடு காண் காதை, கவுந்தியடிகள் வழிநிலைமை கூறல், வேனிலின் வெம்மை, பாலையின் கொடுமை, மராம் ஒமை, உழிஞ்சில் மூங்கில் முதலிய மரங்கள் கருகல், நீர் பெறாது மான்கள் கதறல் - முதலியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

வேனில் காதை: வேனில் வந்தது என்பதைப் பொதிய மலையிலிருந்து வந்த தென்றலாகிய தூதன் அறிவித்தானாம். காமனது படையைச் சேர்ந்த குயிலோன் கூவினானாம். பலவகைப் பூக்களும் பூத்துக் குலுங்கின.

கானல் வரிப் பாடல்களில் இயற்கைக் காட்சிகள் மிகுதி. குன்றக் குரவையில் மலைவளம் இடம் பெற்றுள்ளது.

இந்திர விழவூர் எடுத்த காதையில், புகாரில் இருந்த பட்டினப்பாக்கமும், மருவூர்ப்பாக்கமும் புனையப் படுவதில் மிக்க சிறப்பிடம் பெற்றுள்ளன.