பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

சுந்தர சண்முகனார்


மன்னன் குடிமக்களை நன்முறையில் காப்பதை, மன்னனின் குடை நிழலிலே மக்கள் மகிழ்ச்சியா யிருக்கிறார்கள் என்று கூறுதல் மரபு. ஒரு குடைக் கீழ் நாடு முழுதும் இருப்பதாகப் பொருள் கொள்ளலாகாது. உலக வழக்கில், 'ஏதோ உங்கள்நிழலில் தான் இருக்கிறோம் - நீங்கள்தான் காப்பாற்றவேண்டும்' - என்று மக்கள் கூறுவது உண்டு.

""தெண்கடல் வளாகம் பொதுமையின்றி
வெண்குடை கிழற்றிய ஒருமை யோர்க்கும்" (189:1,2)

என்னும் புறநானூற்றுப் பாடல் பகுதியில் உள்ள 'நிழற்றிய' என்னும் சொல் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.

தன் குடிமக்கட்குக் குடை குளிர்ச்சி தருகிறது எனில், தன் பகைவர்க்கு எதிர்மாறாக வெப்பம் தருவதாகக் கூறுதல் தானே முறை.

இந்தக் குடைபோல், திங்கள், கோவலனோடு கூடியிருக்கும் மாதவிக்கு இன்பமும், கோவலனைப் பிரிந்திருக்கும் கண்ணகிக்குத் துன்பமும் கொடுக்கிறதாம்.

காதலரைப் பிரிந்தவர்களைத் திங்கள் வருத்தும் செய்தி எண்ணிறந்த இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது.

கனாத்திறம் உரைத்த காதை: மாலதி என்பவள் தன் மாற்றாள் குழந்தைக்குப் பால் புகட்டியபோது பால் விக்கிக் குழந்தை இறந்துவிட்டது. மாலதி அஞ்சி, குழந்தையைப் பிழைக்கச் செய்யுமாறு தெய்வங்களை வேண்டிக் கொண்டிருந்தபோது இடாகினி என்றும் பேய் அக் குழந்தையை விழுங்கிவிட்டது. உடனே மாலதி இடியோசை கேட்ட மயில் போல் ஏங்கி அழுதாளாம்:

"இடியுண்ட மஞ்ஞைபோல் ஏங்கி அழுதாள்" (23)

இந்த உவமை சிக்கலாய்த் தோன்றுகின்றது. மழைவரப் போகிறது எனில் மயில் தோகை விரித்தாடும் என்பதாக