பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

சுந்தர சண்முகனார்


இடி இடிப்பின் மயில் அஞ்சுமோ விலங்கு - பறவை நூல் வல்லுநரிடம் கேட்டால் தெரியலாம்.

உலக இடை கழி

நாடு காண் காதை: புகாரின் வெளிக் கோபுர வாயிலைக் கடந்து கோவலனும் கண்ணகியும் சென்றார்களாம். அவ்வழியாக உலகத்து வாணிக மக்களும், சுற்றுலா வரும் மக்களும் போய் வருவதால், அந்த இடம் 'உலக இடைகழி' என இளங்கோவால் இயம்பப்பட்டுள்ளது: பம்பாய் 'இந்தியாவின் வாயில்' (Gate of India) என்று சொல்லப்படுகிறது. புகாரின் கோபுர வாயிலோ உலக இடைகழி (Gate of World) எனச் சிறப்பிக்கப் பெற்றுள்ளது. வெளியில் செல்லும் தெரு கோபுர வாயிலிலிருந்து தொடங்கு கிறது. இது, மலையிலிருந்து தொடங்கும் பெரிய ஆறு போன்று இருக்கின்றதாம்! கோபுரவாயில் மலை - தெரு ஆறு பாடல்:

"மலைதலைக் கொண்ட பேர்யாறு போலும்
உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி" (10:26, 27)

என்பது பாடல் பகுதி. பெரும்பாலும் ஆறுகள் மலைகளி லிருந்து தோன்றுவன. 'மலை தலைக் கொண்ட' என்றால், 'மலையைத் தொடக்க இடமாகக் கொண்ட' என்பது பொருளாம். "மலைத் தலைய கடல் காவிரி" (6) என்னும் பட்டினப்பாலைப் பகுதி ஈண்டு ஒப்புநோக்கத் தக்கது. மற்றும், நீண்ட தெரு ஆறு கிடந்தாற்போல் இருப்பதாகக் கழக இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.

"ஆறு கிடந்தன்ன அகல் நெடுங்தெரு

(நெடுநல்வாடை - 30)

யாறு கிடந்தன்ன அகல் நெடுந்தெரு"

(மதுரைக்காஞ்சி - 359)