பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

141


என்பன பாடல் பகுதிகள். 'உலக இடைகழி' என்பது புகாருக்குப் புதுப்பெருமை அளிக்கின்றதன்றோ?

பல வகையான பறவைகளின் ஒலி, வெற்றிவேந்தரின் போர்முனை ஒலிபோல் கேட்டதாம்:

"உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்
வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்
பல்வேறு குழுஉக் குரல்பரந்த ஓசையும்"
(117-119)

வெற்றி பெற்றவர்கள் எழுப்பும் ஆரவார ஒலி எத்தகையது என்பதை, இந்தக் காலத்துத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களும் அவரைச் சார்ந்தவர்களும் எழுப்பும் ஒலியைக் கொண்டு புரிந்து கொள்ளலாம்.

யாக்கை நிலையாமை

சாரணர்கள் கவுந்திக்கு அருளுரை கூறுகின்றனர்: தீ யூழ் தீமை தருவதை யாராலும் தடுக்கமுடியாது. விதை விதைத்தால் அது பயிராகிப் பயனைக் கட்டாயம் தருதல் போல், நல்லூழ் இருப்பின் நல்ல பயன் கிடைத்தே தீரும். காற்று வீசும் வெளி இடத்தில் விளக்கு அணைந்து விடுதல் போல, உரிய காலத்தில் உயிர் உடம்பினின்றும் பிரிந்து விடும். பாடல்:

"ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை
இட்ட வித்தின் எதிர்ந்து வந்துஎய்தி
ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா
கடுங்கால் நெடுவெளி இருஞ்சுடர் என்ன
ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள்"
(10:171-174)

இது பாடல் பகுதி. விரும்பினும் விரும்பாவிடினும் நடப்பது நடந்தே தீரும். ஈண்டு நாலடியாரில் உள்ள,