பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

சுந்தர சண்முகனார்


மண்ணக மடந்தை

கடலாகிய ஆடையும் மலையாகிய முலையும் பெரிய ஆறாகிய மார்பு மாலையும் முகிலாகிய கூந்தலும் கொண்ட நிலம் (மண்ணகம்) என்னும் பெண்ணின் இருளாகிய போர்வையை நீக்கிக் கதிர் பரப்பி ஞாயிறு தோன்றிற்றாம்.

"அலைநீர் ஆடை மலைமுலை ஆகத்து
ஆரப் பேரியாற்று மாரிக் கூந்தல்
கண்ணகன் பரப்பின் மண்ணக மடங்தை
புதையிருள் படாஅம் போக நீக்கி
உதய மால்வரை உச்சித் தோன்றி
உலகுவிளங்கு அவிரொளி மலர்கதிர் பரப்பி" (5:1-6)

அலை நீர் = கடல். ஆகம் = மார்பு. ஆரம் = மார்பு மாலை. மாரி = முகில் (மேகம்). படாஅம் படாம் = போர்வை.

பொய்யாக் குலக்கொடி

பல்வேறு மரங்களிலிருந்து அடித்துக்கொண்டு வரும் மலர்களாகிய மாலையும் மேகலையும், கரையாகிய அல்குலும், மணல் குன்றுகளாகிய முலைகளும், முருக்க இதழாகிய சிவந்த வாயும், முல்லையாகிய பற்களும், கயலாகிய கண்களும், அறலாகிய கூந்தலும் கொண்டுள்ளாள் வையை என்னும் பொய்யாக் குலக் கொடி பாடல்:

"குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும்
பிடவமும் மயிலையும் பிணங்களில் மணந்த
கொடுங்கரை மேகலைக் கோவை யாங்கணும்
மிடைந்துசூழ் போகிய அகன்றேந்து அல்குல்
வாலுகம் குவைஇய மலர்ப்பூந் துருத்திப்
பால்புடைக் கொண்டு பன்மலர் ஓங்கி
எதிரெதிர் விளங்கிய கதிரிள வனமுலை
வரைகின் றுதிர்த்த கவிர்இதழ்ச் செவ்வாய்