பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

சுந்தர சண்முகனார்


"மைம்மலர் உண்கண் மடந்தையர் அடங்காக்
கொம்மை வரிமுலை வெம்மை வேதுறீஇ
அகிலுண விரிந்த அம்மென் கூந்தல்
முகில்நுழை மதியத்து முரிகருஞ் சிலைக்கீழ்
மகரக் கொடியோன் மலர்க்கணை துரந்து
சிதர்அரி படர்ந்த செழுங்கடைத் தூதும்

மருந்தும் ஆயது" (28:15-21)

இது பாடல் பகுதி. முகில் கூந்தல், மதியம் முகம், சிலை (வில்) புருவம், கடைக் கண் தூது.

பிரிந்திருந்தபோது நோய் உண்டாக்கிய கண்கள் சேர்ந்திருக்கும் இப்போது அந்நோய்க்கு மருந்தாயுள்ளது என்னும் கருத்தோடு ஒத்த திருக்குறள் ஒன்று நினைவைத் தூண்டுகிறது:

"இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்கோக்கு ஒன்று அந்நோய் மருந்து" (1091)

என்பது பாடல். இவளுடைய மையுண்ட கண்களில் இரட்டைப் பார்வை உண்டு; அவற்றுள் ஒரு பார்வை காம நோய் தரும் பார்வை; மற்றொன்று அந்நோய் நீக்கும் மருந்து.

மாலை நான்கு மணியானால் சிலருக்குத் தலைவலி வந்து விடும். தேநீர் அருந்தியதும் அது நீங்கி விடும். அந்தத் தலைவலிக்கு மருந்து எது? தேநீர். அந்தத் தலைவலிக்குக் காரணம் எது? அதுவும் அந்தத் தேநீர்தான். கிடைக்காத போது நோய் - கிடைத்த போது மருந்து. மதுவும் அப்படியே - மங்கையும் அப்படியே போலும்! இந்தக் கருத்து, 6 நாற்பது என்னும் நூலில் உள்ள.

"மருந்தின் தீராது மணியின் ஆகாது
அருந்தவ முயற்சியின் அகறலும் அரிதே

தான்மெய் நோய்க்குத் தான்மருந் தாகிய