பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

சுந்தர சண்முகனார்



அப்படியிருந்தால் அந்தப் பெண் எனக்கு வேண்டாம் - என்று சொன்னானாம். இந்த மாப்பிள்ளைக்கு அண்ணனாய் இருப்பான் போல் தெரிகிறான் கோவலன். மாதவியோ கணிகை குலத்தவளாயினும் கற்புடையவள்.

தன்மேல் கோவலன் வெறுப்புற்றிருக்கிறான் என்பதை அறிந்த மாதவி திறமையாக அவனைக் குளிரச் செய்தாள். பெண்களுக்கா சொல்லித் தரவேண்டும்! முழு நிலாப் பருவம் (Full Moon) வந்தது. ஊரார் கடலாடச் சென்றனர். அப்போது மாதவியும் கோவலனும் கூடக் கடற்கரை ஏகினர். இவர்கள் சென்றதிலேயே பிரிவு இயற்கையாக ஏற்பட்டு விட்டது. குதிரை போன்ற கோவேறு கழுதையின் மேல் கோவலன் சென்றான்; ஒரு வண்டியில் மாதவி சென்றாள்.

கடற்கரைக் கானல் சோலையில் ஒரு புன்னை மர நிழலில் புதுமணல் பரப்பில் ஒர் அறைபோல் சுற்றித் திரைகட்டி மறைவிடமாக்கி உள்ளே கட்டில் இட்டு அதன் மேல் மாதவியும் கோவலனும் அமர்ந்தனர்.

மாதவி வயந்த மாலை கையில் இருந்த யாழை வாங்கினாள். பத்தர், கோடு, ஆணி, நரம்பு இவற்றில் குற்றம் இல்லாத யாழை, பண்ணல், பரிவட்டணை முதலிய எண் வகையாலும் இசையெழுப்பி ஆய்வு செய்தாள் (சோதித்தாள்). விரல்கள் நரம்புகளின் மேல் படர, வளர்தல், வடித்தல் முதலிய இசைக்கரணங்கள் எட்டும் சரிவரப் பொருந்தியுள்ளனவா எனச் செவியால் கேட்டுணர்ந்தாள். கோவலனை வாசிக்கும்படி ஏவவில்லை - வாசிக்க வேண்டிய தாளத்தைத் தொடங்கித் தருவீர் என்று கேட்பவள் போல் கோவலன் கையில் யாழைத் தந்தாள்.

கோவலன் இயற்கையாகக் கானல்வரி வாசித்தான். ஆனால், அதில், ஒரு பெண்மேல் குறிப்புவைத்து வாசித்தாற்