பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

167


"ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி
ஊழி உய்க்கும் பேருதவி ஒழியா தொழுகல்" (27)

"தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற் றென்செய்கோ
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய் மற்று" (34)

"ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய் வாழி கடலோதம்
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய் மற்று" (36)

"பொய்தல் அழித்துப் போனார் ஒருவர்
பொய்தல் அழித்துப் போனார் அவர்நம்" (43)

"நீகல் கென்றே நின்றார் ஒருவர்
நீகல் கென்றே நின்றார் அவர்நம்" (44)

"நென்னல் நோக்கி நின்றார் ஒருவர்
நென்னல் நோக்கி நின்றார் அவர்நம்" (45)

"அடையல் குருகே அடையல் எங்கானல்
அடையல் குருகே அடையல் எங்கானல்" (46)

மேற்காட்டிய பாடல் பகுதியில் இறுதியில் தந்துள்ள 'அடையல் குருகே' என்று தொடங்கும் அடி பாடலின் முதல் அடியாகும். இதுவே இரண்டாம் அடியாகவும் மடங்கி வந்துள்ளது. மற்றைய பாடல் பகுதிகளிலெல்லாம் இரண்டாம் அடிகளே மூன்றாம் அடிகளாக மடங்கி வந்துள்ளன.

கானல் வரியைப் பற்றி இதுபோல் எழுதியதைப் படித்தால் முழுச் சுவையும் பெற முடியாது. சிலப்பதிகார நூலை எடுத்து வைத்துக் கொண்டு கானல் வரிப் பகுதியை ஏடு தள்ளி எடுத்துப் பாடல்களை உரக்க இசைத்துப் படித்தாலேயே முழுச் சுவையையும் பெற முடியும். யான் (சு. ச.) இந்தத் தலைப்பில் எழுதியுள்ள விளக்கம், நூலை எடுத்து நேராகப் பாடலைப் படித்துச் சுவைக்கவேண்டும் என்னும் ஆர்வத்தையும் முயற்சியையும் தூண்டும் பரிந்துரையேயாகும்.