பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

சுந்தர சண்முகனார்


பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும்
விழவு மலி சிறப்பும் விண்ணவர் வரவும்
ஒடியா இன்பத் தவருடை நாட்டுக்
குடியும் கூழின் பெருக்கமும் அவர்தம்
வையைப் பேரியாறு வளஞ் சுரக் தூட்டலும்
 பொய்யா வானம் புதுப் பெயல் பொழிதலும்
ஆரபடி சாத்துவதி என்றிரு விருத்தியும்
நேரத் தோன்றும் வரியும் குரவையும்
என்றிவை அனைத்தும் பிறபொருள் வைப்பொடு
ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்.
வட ஆரியர் படை கடந்து
தென் தமிழ் நாடு ஒருங்கு காணப்
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன்

நெடுஞ் செழியன்......” (1 - 18)

என்பது பாடல் பகுதி.

இவ்வாறாக, இளங்கோஅடிகள், முடியுடை மூவேந்தர்களையும் ஒத்த நோக்கில் கண்டு சிறப்பித்துக் கூறியிருப்பதன் வாயிலாக, தமது சிலப்பதிகாரத்தை ‘மூவேந்தர் காப்பியம்’ என மொழியும்படிச் செய்துள்ளார். இந்த ஒற்றுமை நோக்கு இன்றைய உலகில் இடம் பெறுமாயின், இப்போது துன்ப உலகமாக இருப்பது இன்ப உலகமாக மாறும்.

குடிமக்கள் காப்பியம்

இந்தக் காப்பியம் மூவேந்தர்களையும் சிறப்பித்திருப்பதால் மூவேந்தர் காப்பியம் எனக் கூறப்படினும், காப்பியக் கதைத் தலைவனும் தலைவியுமாகிய கோவலனும் கண்ணகியும் குடிமக்கள் ஆதலின் இதனைக் குடிமக்கள் காப்பியம் எனவும் விதந்து கூறலாம்.