பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

சுந்தர சண்முகனார்


கோவலனும் கண்ணகியும் கேட்டுக் கொண்டதால் மீண்டும் அவர்கள் பழைய உருக்கொள்ளச் சாப நீக்கம் செய்தார்.

இதனால், கவுந்தியின் சீற்றத் தன்மையும் கெடுமொழி (சாபம்) இட்டுப் பின் விடுதலை செய்யும் ஆற்றலும் விளங்கும். நரிகளாக்கிப் பின்பு பழைய உருக்கொள்ளச் செய்தார் என்பதை நம்பாவிடினும், கவுந்தி அவ்விழிமக்கள் இருவர்மீதும் சீற்றம் கொண்டு கடிந்து பேசியுள்ளார் என்பதையாவது ஒத்துக்கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியின் அடிப்படையில், துறவிக்கு ஏற்ற பெருந்தன்மை கவுந்திக்கு இல்லை - அவரை ஒரு மெய்த் துறவியாகக் கொள்ளவியலாது எனக் கவுந்தியின் பண்பைத் திறனாய்வு செய்துள்ளனர் சிலர். அவர் துறவியாதலால் தான் அடிகள் என்னும் சிறப்பு மொழி அவர் பெயருடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கே, திருக்குறள் - ‘நீத்தார் பெருமை’ என்னும் தலைப்பில் உள்ள

“குணமென்னும் குன்றேறி கின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது” (29)

என்னும் குறட்பாவை ஆழ எண்ணிப் பார்க்கின், இந்தச் சிக்கலுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

கவுந்தியின் மறுப்புரை

மாங்காட்டு மறையவன் ஒருவன் அவனது நம்பிக்கையின்படிக் கூறியவற்றையெல்லாம், கவுந்தியடிகள் தம் அருக சமயக் கொள்கையைக் கூறி மறுத்துரைத்தார். இதனால், கவுந்தி வாதிடும் வல்லமையும் உடையவர் என்பது புலனாகும்.

கவுந்தியின் கவர்ச்சி மொழி

“விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் கிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப்பெறின்” (648)