பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

269


கவுந்தியின் கடவுள் கொள்கை

கவுந்தி வணங்கும் கடவுள் அருகனே. அவர் சமண சமயத்தைச் சேர்ந்தவரே. இளங்கோ அடிகள் சமண சமயத் கொள்கைகளைப் பரப்புவதற்காகத் தம் காப்பியத்தில் கவுந்தியடிகளைப் பயன்படுத்திக் கொண்டார் என்று கூறவும் இடம் உண்டு. அதற்கு உரிய அகச்சான்றுகள் சில வருமாறு:

கோவலனும் கண்ணகியும் மதுரைக்குப் போவதை அறிந்த கவுந்தி, யானும், மேலான (சாரணப்) பெரியோர்கள் அருளும் அறவுரைகளைக் கேட்டு அருகதேவனை வணங்குவதற்காக மதுரைக்குச் செல்லவேண்டும் என நெடுநாளாக விரும்பியிருந்தேன். எனவே. இப்போது யானும் உம்முடன் மதுரைக்கு வருவேன் - என்றார். அருகனை வணங்க மதுரைக்குச் செல்பவர் சமண (ஜைன) சமயத்தைச் சார்ந்தவர் தானே?

“மறவுரை நீத்த மாசறு கேள்வியர்
அறவுரை கேட்டாங்கு அறிவனை ஏத்தத்
தென்தமிழ் கன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையே னாகலின்

போதுவல் யானும்”
(நாடுகாண் காதை 56-60)

என்பது பாடல் பகுதி. ‘நன்னாடு’ (நல்+நாடு), ‘தீதுதிர் மதுரை’ என்பன உள்பொருள் உடையன. இது பின்னர் விளக்கப்படும். கவுந்தி இங்கே மதுரையைப் புகழ்ந்துள்ளார்.

கவுந்தி ஒரு கையில் பிச்சைப் பாண்டமும் மற்றொரு கையில் மயில் தோகையும் தோளில் உறியும் கொண்டு மதுரைக்குப் புறப்பட்டாராம்.

“தோமறு கடிஞையும் சுவல்மேல் அறுவையும்

காவுந்தி ஐயை கைப்பீலியும் கொண்டு” (98; 99)