பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22. மாதவியின் மன உறுதி

சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகி ஆகியோருக்கு அடுத்த இடம் மாதவிக்கு உரியது. நாடகங்களில் முதன்மை உறுப்பினர்கட்குத் (பாத்திரங்கட்குத்) துணை உறுப்பினர்கள் இருப்பர். அதன்படி, சிலம்புக் காப்பியத்தில் மாதவி துணை உறுப்பாக உள்ளாள். ஆனால், கதைப் போக்கின்படிப் பார்த்தால், கோவலன் கண்ணகியோடு இருந்த கால அளவினும், மாதவியுடன் இருந்த கால அளவே மிகுதியாகத் தெரிகிறது. காப்பியத்தின் முற்பகுதியில், கண்ணகி தனது இடத்தை மாதவி பற்றிக் கொள்ளத் தான் துணை உறுப்பினர் போல் ஆகிவிடுகிறாள். நாடகங்களில் கதைத் தலைவர்கட்கு எதிராளிகள் (Villains) இருப்பர். இங்கே, கோவலனுக்குப் பொற்கொல்லன் எதிராளியாயிருந்தா னென்றால், கண்ணகிக்கு மாதவி எதிராளியா யிருந்தாள். மனம்விட்டுச் சொல்லலாம் என்றால், கோவலனின் நல்வாழ்வையும் கெடுத்த எதிராளியாக மாதவி இருந்தாள் என்றும் சொல்லலாம்.

தன் ஆடல் பாடல் அழகு ஆகியவற்றால் கோவலனைக் கவர்ந்து ஈர்த்துக் கொண்டவள் மாதவி. காப்பியத்தில் கலையரசியாக நடைபோடும் அவள், மன்னன் எதிரில் ஆடல் பாடல் நிகழ்த்தித் ‘தலைக்கோல்’ விருதுடன் ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் விலைப் பெறுமானம் உடைய பசும்பொன் மாலையும் தட்டிக் கொண்டவள்.

சேற்றில் முளைக்கும் செந்தாமரையைப் போல், இழிதொழில் புரிந்த சித்திராபதி என்னும் பரத்தையின்