24
சுந்தர சண்முகனார்
கணவன் கொலையுண்டான் என்பதை யறிந்த கண்ணகி கூறியனவாக ஊர்சூழ்வரிக் கதையில் பின்வருமாறு உள்ளது.
“காதல் கணவணைக் காண்பனே ஈதொன்று
காதல் கணவணைக் கண்டால் அவன் வாயில்
தீதறு நல்லுரை கேட்பனே ஈதொன்று
தீதறு நல்லுரை கேளாது ஒழிவனெல்
நோதக்க செய்தனன் தென்னன் இதுவொன்று”
“பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்
கொண்ட கொழுநர் உறு குறை தாங்குறுஉம்
பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்
சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்
ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறுஉம்
சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்
தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்
வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்”
“நின்றாள் கினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்சோர
நின்றாள் கினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்துடையா”
வழக்குரை காதையில், பாண்டியனது அரண்மனை வாயில் காவலனை நோக்கிக் கண்ணகி கூறியது:
“வாயிலோயே வாயி லோயே
அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே
இணையரிச் சிலம்பொன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத் தாள் என்று