பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

277


விலை தந்து பெற்ற மாலையுடனேயே கோவலன் மாதவியின் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறான். அதிலிருந்து மாதவியின் மனையிலேயே தங்கிவிட்டான் என்று சொல்லப்படுகிறது. இதன் பொருள்; கோவலன் இடையிடையே பொருள் கொண்டுவரத் தங்கள் வணிக நிலையத்திற்கும் கண்ணகியிருக்கும் தங்கள் வீட்டிற்கும் செல்லாமல் மாதவியின் வீட்டிலேயே ஆணியடித்துக் கொண்டு - வேர் பாய்ந்து தங்கி விட்டான் - என்பது இதன் பொருள் இல்லை. இடையிடையே கடைக்கும் வீட்டிற்கும் சென்று, அங்குள்ளார் சொன்ன அறிவுரையை மதிக்காமல் பொருள் கொண்டு வந்தேயிருப்பான். இறுதியாக மாதவியை வெறுத்துக் கண்ணகியை அடைந்தபோது, பொருள் தீர்ந்து விட்டதால் கணவன் வந்திருப்பதாக எண்ணிச் “சிலம்பு உள கொண் மின்” என்று கண்ணகி கூறினாள்.

இதிலிருந்து தெரிவதாவது:- கண்ணகி இதற்கு முன்பே ஒவ்வொரு நகையாகக் கணவனிடம் தந்து இழந்திருக்கிறாள் என்பது விளங்கும். கோவலன் கண்ணகியிடம் வந்ததும், அவளது வாடிய மேனியைக் கண்டு வருந்திக் கூறுவான்; வஞ்சனையுடைய மாய்மாலக்காரியுடன் சேர்ந்து ஆட்ட பாட்டம் செய்து, முன்னோர் தேடி வைத்த மிகப் பெரிய மலையத்தனைச் செல்வத்தையிழந்து, வறுமையால் நாணம் அடைந்துள்ளேன் என்று கூறினான். இதனாலும் கண்ணகியின் நகைகளும் வீட்டுச் செல்வமும் தொலைந்தன என்பது புலனாகும்; (கனாத்திறம் உரைத்த காதை)

“வாடிய மேனி வருத்தம்கண் டியாவும்
சலம்புணர் கொள்கைச் சலதியோடு ஆடிக்
குலம்தரு வான்பொருட் குன்றம் தொலைந்த

இலம்பாடு நாணுத்தரும் எனக்கு என்ன” (68-71)

என்பது பாடல் பகுதி. இந்தச் செல்வம் தொலைந்த-