பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

285


என்பது பாடல் பகுதி. மாதவி தான் ‘நல்திறம் படர்கேன்’ எனக் கூறியிருப்பது எண்ணத்தக்கது. அதாவது - குலத் தொழில் செய்யேன் என்றாள். மணிமேகலையையும் அத் தொழிலுக்கு விடக்கூடாதென அறிவுறுத்தியுள்ளாள்.

மணிமேகலையிலிருந்து இன்னும் ஒரு சான்று பார்க்கலாமா? கோவலனின் மறு பதிப்புபோல் மணிமேகலையில் சாதுவன் என்பவன் குறிப்பிடப்பட்டுள்ளான். அவன் வரலாறாவது:- சாதுவன் என்னும் வணிகன் பெருந்தன்மையின்றி, தன் மனைவியாகிய ஆதிரையை விட்டுப் பிரிந்து, கணிகை ஒருத்தியைச் சார்ந்து அவள் தந்த உணவை உண்டு அவளுக்கு நிரம்பப் பொருள் ஈந்ததாலும் வட்டும் சூதும் ஆடியதாலும், தன் செல்வம் முழுவதையும் இழந்துவிடவே, அந்தக் கணிகை, இவன் பொருள் இல்லாதவனாகி விட்டான் என இவனை விரட்டிவிட்டு, பொருளியும் வேறொருவனை மடக்கிக் கொண்டாள் - என்பது அவன் வரலாறு.

“ஆதிரை கணவன் ஆயிழை கேளாய்
சாதுவன் என்போன் தகவில னாகி
அணியிழை தன்னை அகன்றனன் போகிக்
கணிகை ஒருத்தி கைத்துஊண் நல்க
வட்டினும் குதினும் வான்பொருள் வழங்கிக்
கெட்ட பொருளின் கிளைகேடு உறுதலின்
பேணிய கணிகையும் பிறர்நலம் காட்டிக்

காணம் இலியெனக் கையுதிர்க் கோடலும்” (16:3-10)

என்பது மணிமேகலைப் பாடல் பகுதி. இதைக் கொண்டு கணிகையர் இயல்பு புரிய வரும். மற்றும், சிலப்பதிகாரத்தில் உள்ள

“சலம்புணர் கொள்கைச் சலதியோ டாடிக்
குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைந்த

இலம்பாடு நானுத் தரும்” (9:69-71)