பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

335


"அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அறிவ ராலோ
அரிந்தசிரம் அணங்கின்கைக் கொடுப்ப ராலோ
கொடுத்தசிரம் கொற்றவையைப் பரவு மாலோ
குறையுடலம் கும்பிட்டு கிற்கு மாலோ"

சிலப்பதிகார உயிர்ப்பலியைவிட, கலிங்கத்துப்பரணி உயிர்ப்பலி கடுமையாகத் தெரிகிறதே!

கரிகாலன் பகைவரிடமிருந்து பெற்ற முத்துப் பந்தரும் பட்டி மண்டபமும் வாயில் தோரணமும் உள்ள மண்டபம் ஒரு பகுதியில் இருந்தது.

வெள்ளிடை மன்றம்: பரசரக்குப் பொதிகள் உள்ள இடம். திருடியவர் ஊர் சுற்ற வைக்கப்படுவர்.

இலஞ்சி மன்றம் நோயுற்றோர் குளித்தால் நோய் போக்கும். .

நெடுங்கல் மன்றம்: பித்து மருந்து உண்டவர், நஞ்சு அருந்தியவர், பேய் கோட்பட்டவர் ஆகியோர் இந்த மன்றத்தைச் சுற்றிவரின் நோய் போக்கும். இதில் உள்ள கல் ஒளி உமிழும்.

பூத சதுக்கம் பொய் வேடத்தார், கற்பு கெட்டவர், தீய அமைச்சர், பிறன்மனை விரும்புபவர், பொய்ச் சான்று புகன்றவர் ஆகியோரைப் புடைத்து உண்ணும் பூதத்தின் இருப்பிடம் அது.

பாவை மன்றம்

அரசன் கோல் கோடினும், நீதி மன்றத்தார் நடுநிலை தவறினும் வாய் பேசாமல் நீர் சொரியும் பாவையுள்ள மன்றம் இது.

இந்திர விழாவின்போது, பல தெய்வங்களின் கோயில் களிலும் தீ வளர்த்தனர். முப்பத்து மூவர் முதலியோர்க்கு