சிலம்போ சிலம்பு!
12
பெருமையையும், கன்றுக்காகத் தன் மகன்மேல் தேரோட்டி முறைசெய்த மனுநீதி சோழனின் பெருமையையும் கூறிற்று.
சோழ நாட்டுக் கற்புடைய மங்கையரின் புகழ் மிக்க வரலாறுகள் கண்ணகியால் கூறப்பட்டன.
சிலம்பில் சோழரின் வெற்றிகள் சில குறிப்பிடப்பட்டு உள்ளன: தெற்கிலும் மேற்கிலும் பகை இல்லையாதலின் கரிகாலன் வடக்கே படையெடுத்துச் சென்று வென்றது, இமயத்தைச் செண்டால் அடித்தது, புலி பொறித்தது ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.
மற்றும், முசுகுந்தச் சோழன் இந்திரனுக்கு உதவி செய்தமை, தொடித்தோட் செம்பியன் துங்கெயில் எறிந்தமை முதலிய சோழர் குடியின் சிறப்புகள் பல பெரிதுபடுத்திப் பேசப்பட்டுள்ளன.
அரசன் நன்முறையில் செங்கோல் செலுத்தினாலேயே பெண்களின் கற்பு காக்கப்பட்டுச் சிறப்பெய்தும் என்னும் தமிழ் உரையை மெய்ப்பிக்கும் வகையில் கண்ணகி தன் கற்பின் திண்மையால், கிடைத்த புகழைச்சோழ மன்னனுக்கு உரிய தாக்கினாளாம்.
"அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது
பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப்
பண்டையோர் உரைத்த தண்தமிழ் நல்லுரை
பார்தொழு தேத்தும் பத்தினி யாகலின்
ஆர்புனை சென்னி அரசர்க்கு அளித்து"
(28:207-211)
என்பது பாடல் பகுதி. மணிமேகலைக் காப்பியத்திலும் இந்தக் கருத்து இடம் பெற்றுள்ளது:
"மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
காவலன் காவல் இன்றெனின் இன்றால்"
(23:208.9)
என்பது பாடல் பகுதி. இவ்வாறாகப் புகாரின் சிறப்பும் சோழர் குடிச் சிறப்பும் உரிய முறையில் சிலம்பில் இடம் பெற்றுள்ளன.